அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

SHARE

பாரிஸ்:

24 மணி நேரத்தில் 45,000 நபர்களைக் கொரோனா தாக்கிய சூழலில் பிரான்ஸ் நாட்டில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமலானது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சில் மார்ச் 26ஆம் தேதிமுதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த சில நாட்களாக பிரான்சில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று மார்ச் 26ஆம் தேதியன்று 24 மணிநேரத்தில்  45,000 நபர்களுக்குப் பரவியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பிரான்சில் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் அறிவித்தார்.

இந்த ஊரடங்கின் படி பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான விதிமுறைகள் அமலாகி உள்ளன. உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கேளிக்கை விடுதிகள் – உள்ளிட்டவை இனி இரவில் மூடப்படுகின்றன. வரும் நாட்களில் இந்தக் கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

பிரான்ஸ்சில் உள்ள மருத்துவ அமைப்புகளுக்கு இனி அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும் என பிரான்ஸ் நாட்டின் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் கூறி உள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது ஆகும்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவனர்…!

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

அரசியலில் ஈடுபட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? – விழுந்து விழுந்து சிரித்த தலிபான்கள்

Admin

நான் இந்தியன் என்பது எப்போதும்என்னுள் இருக்கிறது! – சுந்தர் பிச்சை பேச்சு

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

தற்பாலின ஜோடிகளின் திருமணம் – வாடிகனின் உத்தரவை மீறும் ஜெர்மனி பாதிரியார்கள்!.

Leave a Comment