மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

SHARE

மியான்மர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்ல உத்தரவிட்டதால் ஒரு இராணுவ அதிகாரி இந்தியாவில் அகதியாகத் தஞ்சம் புகுந்துள்ளார்.

தமிழர்களுக்கு பர்மா என்ற பெயரில் பரிச்சயமான நாடுதான் மியான்மர். இங்கு அடிக்கடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்ப்பது உண்டு. தற்போதும் அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது.

அடக்குமுறைகள் நிறைந்த இராணுவ ஆட்சியை பர்மிய மக்கள் வெறுக்கிறார்கள். இதனால் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுவடைந்து உள்ளன. அதே சமயம் மியான்மரின் இராணுவமும் போராட்டக்காரர்கள் ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்து வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களைக் கொல்ல தனது உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதனைச் செய்ய மனம் வராமல் குடும்பத்தோடு மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு வந்து அகதியாக தங்கி உள்ள ஒரு அதிகாரியின் கதை ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

மியான்மரின் காம்பாட்நகரில் பிப்ரவரி 27ஆம் தேதியன்று போராட்டக் காரர்களை சுட்டுக் கொல்லும்படியான உத்தரவு தா பெங் என்ற இந்த அதிகாரிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரும் அவரது 6 நண்பர்களும் அதை செய்யாமல் இருக்க மேல் இடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

உடனே வேலையை ராஜினாமா செய்த தா பெங், மார்ச் 1ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் மியான்மரில் இருந்து ரகசியமாகக் கிளம்பி, மூன்று நாட்கள் பயணத்தில் மிசோரம் வழியாக இந்தியாவை அடைந்து இருக்கிறார். இவர் கூறிய தகவல்கள் உண்மையானவை என்று சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் உறுதி செய்து உள்ளது.

இனி மீண்டும் மியான்மரில் மக்களாட்சி மலர்ந்தால்தான் இவரால் நாடு திரும்ப இயலும். ஆனாலும் இவரது கருணை கண்டிப்பாக எதிர்காலத்தில் போற்றப்படும்.

நமது நிருபர்

Photo courtesy: GettyImages


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கனை விட்டு வெளியேறும் மக்கள் – விமானத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம்

Admin

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழர்… ராஜகோபால் ஈச்சம்பாடி எனும் நான்

Admin

அப்புறம் அடுத்த ஸ்கெட்ச் யாரு? : சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணம் …விரைவில் 3ம் பட்டியல்?

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

டெல்டாவை விட பயங்கரமான வைரஸ் தோன்றலாம் :உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Admin

Leave a Comment