கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பானைகள்

SHARE

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழக தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

அங்குள்ள கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், அஜய், ரமேஷ், காவ்யா உள்ளிட்டோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், கீழடியில் இதுவரை மூடியுடன் கூடிய பானை, உறைகிணறுகள், வரி வடிவ பானை ஓடுகள், சுடுமண் பகடை, கல் உழவு கருவி, வெள்ளி முத்திரை நாணயம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழங்கால தமிழர் நாகரிகம் அடுத்தடுத்து வெளிவருவதால் பொதுமக்கள் பலரும் கீழடி அகழாய்வு பணியை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் அகழாய்வில் ஒரு குழியில் சிவப்பு நிற சிறிய பானை, அடர் சிவப்பு நிற பானை 60 செ.மீ உயர பெரிய பானை, கிண்ணம் போன்ற கருப்பு சிவப்பு நிற பானை, தேமடைந்த நிலையில் மற்றொரு பானை என ஒரே குழியில் 4 பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வணிகர்களை கவர்வதற்காக இந்த சிவப்பு நிற பானைகளை பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்க கூடும் என கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

இரா.மன்னர் மன்னன்

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

கொற்கை அகழாய்வில் கிடைத்த பழங்கால வெளிநாட்டு நாணயம்…!

Admin

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

ரோசாப்பூ என்று ஏன் ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப்படுகின்றது?

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

கல்கி ஒரு சகாப்தம் – கல்கி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

Nagappan

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

Leave a Comment