யூடியூபர் வேட்பாளரானார்!.

SHARE

நமது நிருபர்

யூடியூபில் சென்னை தமிழச்சி என்ற பெயரில் பிரபலமான பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பேரவைத் தேர்தலில் 136 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 70 வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த வேட்பாளர் பட்டியலில் சமூக ஆர்வலர்கள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, கல்வியாளர்கள் போன்ற மக்களுக்கு பரிச்சயமான பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுபவராக பிரபல யூடியூபரான சென்னை தமிழச்சி பத்மப்பிரியா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு 2020 ல், தனது யூடியூப் சேனலில் மத்திய அரசின் ’சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” வரைவு அறிக்கையை பற்றிய தகவல்களையும், இதனால் மக்களுக்கும், சுற்றுக்சூழலுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகளையும், பற்றி பேசிய ஒரு வீடியோவை இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். கோபத்தோடு இவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

அந்த வீடியோவில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததால், அவருக்கு தனிப்பட்ட முறையில் நிறைய எதிர்ப்புகள் வந்தன. இதனால் முதலில் அந்த வீடியோவை நீக்கிவிட்டார். இதன்பிறகு இவருக்கு நிறைய மக்கள் ஆதரவும், அன்பும் கிடைத்தது. அதே சமயம் உடல் ரீதியான தாக்குதலுக்கும் இவர் ஆளானார். முன்னர் சமையல், மருத்துவம் போன்றவை பற்றிய காணொலிகளை அதிகம் வெளியீடு வந்த இவர் இந்த சம்பவத்திற்குப் பின்னர் மக்கள் சார்ந்த போராட்டங்கள் குறித்து அதிகம் பேசத் தொடங்கினார்.

“மக்கள் நலன்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் என்பதற்காக என்னைப் போராளி என்று சொல்வார்களேயானால், நான் போராளியாக இருந்துவிட்டுப்போகிறேன்’ என்று ஒரு பேட்டியிலும் அவர் கூறி இருந்தார். பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த அவருக்கு இப்போது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்து உள்ளது. யூடிபூபில் ஆதரவு கொடுக்கும் மக்கள் அரசியல் களத்தில் ஆதரவு கொடுப்பார்களா? – என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் சொல்லும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

பதவியை ராஜினாமா செய்த பிரசாந்த் கிஷோர்… அதிர்ச்சியில் பாஜக… அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன?

Admin

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

மீனவர்கள் தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் – அதிரவைக்கும் அரசின் வெள்ளை அறிக்கை

Admin

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment