பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

SHARE

கோவில் சொத்துக்களுக்கு உரிமையாளர் பூசாரியா? அல்லது தெய்வமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோவில் சொத்துக்களை பூசாரிகள் சட்ட விரோதமாக விற்பதை தடுக்கும் வகையில் வருவாய் பதிவேட்டில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமென நில வருவாய் சட்டத்தின் கீழ் அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்தது.

இதை எதிர்த்து மத்தியப்பிரதேச அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ். போபண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலை ஒட்டிய நிலத்திற்கான உரிமையாளரின் பெயர் குறிப்பிடும் இடத்தில் தெய்வத்தின் பெயரைத்தான் எழுத வேண்டும். கோயில் நிலங்களுக்கு அக்கோயிலில் இருக்கும் கடவுள்தான் சட்டப்பூர்வ உரிமையாளர் என தெரிவித்தனர்.

மேலும் பூசாரி என்பவர் கடவுளின் சொத்தை பராமரிக்கும் ஒரு மேலாளர் மட்டுமே. இதைத்தான் சட்டம் தெளிவாக சொல்கிறது. கடவுளின் சொத்தில் மேலாளர் எனும் பூசாரி பூஜை செய்து பராமரிக்கலாம். அதை செய்யத் தவறினால், வேறொருவரை மாற்றலாம்.

மற்றபடி பூசாரி ஒருபோதும் உரிமையாளர் ஆக முடியாது. வருவாய் பதிவேட்டில் பூசாரியின் பெயரை குறிப்பிட வேண்டுமென எந்த ஒரு தீர்ப்பிலும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

Admin

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

Leave a Comment