பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

SHARE

கோவில் சொத்துக்களுக்கு உரிமையாளர் பூசாரியா? அல்லது தெய்வமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோவில் சொத்துக்களை பூசாரிகள் சட்ட விரோதமாக விற்பதை தடுக்கும் வகையில் வருவாய் பதிவேட்டில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமென நில வருவாய் சட்டத்தின் கீழ் அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்தது.

இதை எதிர்த்து மத்தியப்பிரதேச அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ். போபண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலை ஒட்டிய நிலத்திற்கான உரிமையாளரின் பெயர் குறிப்பிடும் இடத்தில் தெய்வத்தின் பெயரைத்தான் எழுத வேண்டும். கோயில் நிலங்களுக்கு அக்கோயிலில் இருக்கும் கடவுள்தான் சட்டப்பூர்வ உரிமையாளர் என தெரிவித்தனர்.

மேலும் பூசாரி என்பவர் கடவுளின் சொத்தை பராமரிக்கும் ஒரு மேலாளர் மட்டுமே. இதைத்தான் சட்டம் தெளிவாக சொல்கிறது. கடவுளின் சொத்தில் மேலாளர் எனும் பூசாரி பூஜை செய்து பராமரிக்கலாம். அதை செய்யத் தவறினால், வேறொருவரை மாற்றலாம்.

மற்றபடி பூசாரி ஒருபோதும் உரிமையாளர் ஆக முடியாது. வருவாய் பதிவேட்டில் பூசாரியின் பெயரை குறிப்பிட வேண்டுமென எந்த ஒரு தீர்ப்பிலும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

Leave a Comment