நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

SHARE

தெலங்கானாவில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு, தெலங்கானா மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தெலங்கானாவின் பள்ளி,கல்லூரி திறப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.

அதேசமயம் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்ததாகவும், மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவை மீண்டும் உலுக்கிய வரதட்சணை மரணம் – பொதுமக்கள் அதிர்ச்சி

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

Leave a Comment