சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

SHARE

தமிழ்ச்சமூகம் ஓர் இருண்ட காலத்தில் உழன்று கொண்டிருக்கிறது. வாழ்ந்து செழித்த இனம் தற்போது அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு வருகின்றது. ஓர் தேசிய இனம் தன்னுடைய மொழியின் மீதான இறைமையை இழந்து, தன்னுடைய வரலாற்றையும் மரபறிவையும் மறந்து, தன் நிலத்தின் மீதான அதிகாரத்தை துறந்து, நாடின்றி அகதியாக அநாதையாக வாழும் காலத்தை ‘தேசிய இனத்தின் வீழ்ச்சிப் படலம்’ எனலாம். அத்தகைய வீழ்ச்சிப் படலத்தை நோக்கி அறிந்தோ அறியாமையிலோ ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. 

இந்நிலையில் வீழ்ச்சிப் படலத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சீழ்பிடித்த நமது அறிவையும் பண்பாட்டையும் சீரமைத்து ஓர் ஒளிமயமான மறுமலர்ச்சி காலத்தை நோக்கி முன்னகர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் அத்தகைய மறுமலர்ச்சி காலத்திற்கான ஓர் தொடக்கமாக விளங்கியது தான் இடிந்தகரை போராட்டம். உண்மையில் அது இடிந்தகரை அல்ல தமிழினம் எழுந்தகரை என்பது தான் சாலப்பொருத்தம். தமிழ்த்தேசிய இனம் தன் மொழியை காக்க மொழிப்போர் நடத்தியது போல் தன் நிலத்தையும் அதன் வளங்களையும் சூழலையும் காக்க நடத்திய நிலப்போர் தான் இடிந்தகரை போராட்டம். 

அந்த இடிந்தகரை போராட்டத்தை வழிநடத்திய ஆளுமைகளில் ஒருவரான சுப. உதயகுமாரன் அவர்கள் எழுதிய நூல் தான் ‘பச்சை தமிழ்த் தேசியம்’. இந்நூல் இடிந்தகரை போராட்ட சூழலில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 2009 ஈழ இன அழிவிற்கு பின்பு தமிழ்நாட்டில் புதியதொரு தமிழ்த்தேசிய எழுச்சி உருவாகியிருக்கிறது. இதுவரை மொழிக்காக மட்டுமே குரலெழுப்பி வந்த இனம் இனி இனத்திற்காகவும் நிலத்திற்காகவும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்காகவும் குரலெழுப்ப தொடங்கியிருக்கிறது. அத்தகைய தமிழின எழுச்சிச் குரலை நெறிப்படுத்தி சீர்படுத்தி ஒழுங்குப்படுத்த தன்னாலான முயற்சிகளை இந்நூலின் மூலமாக வழங்கி இருக்கிறார் சுப. உதயக்குமாரன்.

இந்நூலை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம். தமிழ்ச்சமூகத்தின் தற்போதைய இழிநிலையையும் அதற்கான கடந்தகால அரசியல் பிழைகளையும் எடுத்துரைக்கும் கட்டுரைகளை ஒரு பிரிவாகவும், தேசிய உருவாக்கம், இந்திய தேசியம், தமிழ்த்தேசியம், தெற்காசிய பிராந்தியம் போன்ற பல்வேறு தேசிய செயல்பாடுகளை அலசும் பகுதிகளை ஒரு பிரிவாகவும், தமிழ்ச்சமூகம் மீளெம்புதலுக்கான செயல்திட்டங்களையும் அதை நடைமுறைப்படுத்திக் காட்டும் கனவுலக வாழ்க்கையை பிரதிபலிக்கும் பகுதிகளை ஒரு பிரிவாகவும் வகுக்கலாம். 

தமிழ்த்தேசியத்தின் பால் ஈர்ப்பு கொண்ட தமிழ் இளைஞர்கள், முற்போக்காளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரும் இந்நூலை ஆழமாக படித்து தெளிந்து தங்கள் செயல்பாட்டை கூர்மைப்படுத்திக் கொள்ளலாம்.

பதிப்பகம்: காலச்சுவடு

பக்கங்கள்: 160

விலை: ரூ.125

– சந்திரன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய சூதாடி – நூல் அறிமுகம்

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

ஒடுக்கப்பட்ட பெண்மையின் கதை சொல்லும் ‘தவ்வை’ நாவல் – நூல் மதிப்புரை

எனதருமை டாஸ்டாய் – உலக ஆளுமைகளுடன் உள்ளூர்மொழி பயணம் – புத்தக அறிமுகம்

Admin

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

Leave a Comment