காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

SHARE

நமது நிருபர்.

ஆப்ரிக்க நாடான காங்கோவில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உலகின் மிக அரிய உலோகங்களில் தங்கமும் ஒன்று. தங்கச் சுரங்கங்களில் கூட ஆயிரம் கிலோ மண்ணை சுத்தப்படுத்தும்போது 4 முதல் 8 கிராம் தங்கமே கிடைக்கின்றது. இந்த 4 கிராம் தங்கம் கூட கிடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் இந்தியாவில் கோலார் தங்கச் சுரங்கம் மூடவும்பட்டது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள லுகிகி என்ற கிராமத்தில் ஒரு தங்க மலை தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சில உள்ளூர் வாசிகள் இந்த மலையின் மண்ணை ஆராய்ச்சி செய்தபோது, அதில் 60 முதல் 90 விழுக்காடு வரையில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உள்ளூர்வாசிகள் கடப்பாறை, மண்வெட்டியுடன் அங்கு வந்து மண்ணை எடுத்துச் சென்றனர்.

இந்தச் செய்தி காங்கோ முழுக்க பரவ, பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வர ஆரம்பித்தனர். இப்படியாக மக்கள் மண்ணை அள்ளிச் சென்று தண்ணீரில் அலசி தங்கத் துகள்களை எடுப்பது தொடர்பான காணொலி ஒன்றை ஒரு பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர, அந்த காணொலி உலகம் முழுக்க பரவியது.

இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர். Ativador Office 2016

அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டினர். பின்னர் அதனை பைகளில் போட்டு வீட்டுக்கு எடுத்துச்சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது தங்க மலையைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள காங்கோ நாட்டின் அரசு, அங்கு பிறர் மண் எடுக்கத் தடை விதித்து உள்ளதோடு, டுவிட்டரில் பரவிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மலையில் தங்கம் திருடியவர்களையும் தேடி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

Admin

இனி சூப்பராக போட்டோ எடுக்கலாம்… செல்ஃபிக்கு எதிராக இணையத்தில் வைரலாகும் புதிய செயலி

Admin

கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

திருஷ்டி பூசணிக்காயாக சன்னி லியோன்… சோகத்தில் ரசிகர்கள்…!

Admin

7 முறை மின்னல் தாக்கிய ‘மனித இடிதாங்கி’!.

அட்டகாசமான “ஆடி ஆஃபர்” … களைக்கட்டும் அமேசான் சிறப்பு விற்பனை

Admin

முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

இரா.மன்னர் மன்னன்

வடக்கு கூட்டணி படையினருடனான சண்டையில் 350 தாலிபான்கள் பலி?

Admin

Leave a Comment