ஒருவருக்கு கொரோனா பாதிப்பு .. 3 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்

SHARE

நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இருவருடங்களாக கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் போராடி அதனை கட்டுப்படுத்தி வருகின்றது. சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை பூஜ்யத்தில் உள்ளது.

அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வந்தது இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

இதனிடையே முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் 58 வயது நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆக்லாந்து மட்டுமின்றி நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக என அந்நாட்டின் பிரதமர் ஜெசிகா அறிவித்துள்ளார்.

லட்சக்கணக்கில் பாதிப்புள்ள நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே ஒருவருக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

நான் இந்தியன் என்பது எப்போதும்என்னுள் இருக்கிறது! – சுந்தர் பிச்சை பேச்சு

Admin

இதென்ன சானிடைசரா? … சுட்டிக்குழந்தையின் வீடியோ வைரல்…

Admin

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

பெயர் மாற்றம் செய்யப்படும் “ஆப்கானிஸ்தான்” -தாலிபான் அதிரடி அறிவிப்பு

Admin

துப்பாக்கி முனையில் செய்தி வாசித்த பத்திரிக்கையாளர்.. வைரல் வீடியோ

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

இடது கையின் பின்னே இவ்வளவு இருக்கா? – சர்வதேச இடது கை நபர்கள் தின சிறப்புக் கட்டுரை!.

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுத்தாக்குதல் !

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

Leave a Comment