மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

SHARE

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டுவிட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்திருந்தார்.அதற்கு அடுத்தநாளே கர்நாடகாவுக்கு மேகதாது அணை மிக முக்கியம் எனவும், மத்திய அரசிடம் அனுமதி பெற்று அணையை கட்டுவோம் எனவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதையடுத்து, காவிரி ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மேகதாது அணை கட்டும் பேச்சை தற்போது எடுக்க வேண்டாம் என்றும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்றும் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும், இரண்டு மாநில முதலமைச்சர் அல்லது அதிகாரிகளுடன் ஆலோசிக்க தயார் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

இந்தியாவில் டுவிட்டர் தளம் முடக்கம்..? டுவிட்டர் இந்தியா விளக்கம்

Admin

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

டவ்-தே புயல் பாதிப்பு: குஜராத்தில் உயிரிழப்பு 53ஆக அதிரிப்பு

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

Leave a Comment