Close Menu
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Mei EzhuththuMei Ezhuththu
Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
Mei EzhuththuMei Ezhuththu
Home » இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் : பேரவையில் ஸ்டாலின் முழக்கம்
அரசியல்

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் : பேரவையில் ஸ்டாலின் முழக்கம்

AdminBy AdminSeptember 9, 202104 Mins Read0 Views
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Reddit Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
SHARE

ரூ.15 கோடி மதிப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற தமிழினத் தலைவர் கலைஞர் போற்றிய செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையையும், உலகத்துக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலம் வந்த தமிழினத்தின் சிறப்பை பறை சாற்றும் அறிவிப்பு ஒன்றை விதி எண் 110 இன் கீழ் இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை பெருமையாகக் கருதுகிறேன்.

சிவகளைப் பறம்பு முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு.1155!

3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தைக் காட்சிப்படுத்த ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும்!

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்பட வேண்டும்.#அன்னைமடிபொருநை pic.twitter.com/h8G90BplVm

— M.K.Stalin (@mkstalin) September 9, 2021

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அப்ப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத்தான் இருந்துள்ளது. மகாசக்ரவர்த்திகள் எல்லாம் இந்தியாவைத் தன் குடையின் கீழ் கொண்டு வந்து ஆண்டபோதும் தனிக்குடையின் கீழ் ஆளுகை செலுத்திய மண் இந்த தமிழ் மண்.

இவை எல்லாம் ஏதோ சில இலக்கிய ஆதாரங்களை வைத்து மட்டும் சொல்லவில்லை. அசைக்க முடியாத தொல்லியல் ஆதாரங்கள் இருக்கிறது. இவை அனைத்தும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத ஆதாரங்கள் ஆகும். முதல்வர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிகாலத்தில் தொல்லியல் ஆழ்கடல் கள ஆய்வை விரிவாக மேற்கொள்ள பெருமுயற்சி எடுத்தார். கடந்த 1990 ஆம் ஆண்டு கடல்சார் ஆய்வுக்குப் பெருந்திட்டம் தீட்டியதும், பின்னர் கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தினைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் அகழாய்வில் சில கட்டுமானப் பகுதிகள் கண்டறியப்பட்டதும் முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால்தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை அள்ளிக்கொடுக்கும் கீழடியில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சியை ஒன்றிய அரசு பாதியிலேயே கைவிட்டபோது, முத்தமிழறிஞர் கலைஞர் அதற்கு எதிராக தன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

நானும் கடந்த 2019 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, கீழடிக்கு நேரடியாகச் சென்று, அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன். வியக்கவைக்கும் செங்கல் கட்டுமானங்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், அரிய கல்மணிகள், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரிக காலத்தில் காணப்பட்ட அதே திமில் கொண்ட காளையின் எலும்புகள், விளையாட்டுப் பொருட்கள், தொழிற்பகுதிகள் என ஒரு செழுமைமிக்க சமூகமாக சங்காலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மட்டுமல்ல, உலகமே அறிந்து கொண்டது.

அதுமட்டுமல்ல, கரிமப் பகுப்பாய்வுமுடிவுகளின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக சங்க காலத் தமிழர்கள் விளங்கினர் என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். அந்த வகையில், ‘கீழடி’ என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது என்றே சொல்லவேண்டும்.

அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில்தற்போது அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள்கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக்காசு ஒன்றுகண்டெடுக்கப்பட்டது.

அதை ஆய்வு செய்த தலைசிறந்த நாணயவியல் நிபுணரும், கொல்கத்தா பல்கலைக் கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மசும்தார் – இந்த வெள்ளி முத்திரைக் காசு, கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னரே, அதாவது மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில், ஒருமுக்கிய ஆய்வு முடிவை இங்கு வெளியிட விரும்புகிறேன்.

தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின் போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள்தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்கநாட்டின் மியாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்றBeta Analytical Laboratory பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன.

AMS Carbon Dating முறையில் ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்துஎனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதைத் தமிழ் கூறும் நல் உலகம் அறியும் வகையில், இந்த ஆய்வுமுடிவுகளை அறிவிப்பதில் அள விட முடியாத பெருமிதமும், மனமகிழ்ச்சியும் கொள்கிறேன்.

பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரியமணிகள் தயாரித்தல், முத்து குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக ஐந்து கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதை, மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

அதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்த அரிய பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது “பொருநை ’’ அருங்காட்சியகம் என அமைக்கப்படும். இதுமட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முதற்கட்டமாக, சங்ககால துறைமுகமான முசிறி தற்போதுபட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்து கொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும். அதேபோல், ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அன்றைய ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும் ஓமன் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மாமன்னன் இராசேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டு தொல்லியல் வல்லுநர்கள்துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள்மேற்கொள்ளப்படும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனிஉலகெங்கும் பயணம் செய்வோம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நிறுவுவதே நமது அரசின் தலையாயக் கடமை என்பதை இம்மாமன்றத்தின் மூலம் உலகிற்கு அறிவிப்பதில் நான் பெருமையாகக் கருதுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


SHARE
Assembly history ofindian mkstalin tamilan
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Admin
  • Website

Related Posts

பிரபாகரன் உயிருடன் உள்ளார் : பரபரப்பை ஏற்படுத்திய பழ. நெடுமாறன் , நடந்தது என்ன?

February 13, 2023

200 நாட்களாகப் போராடும் மக்கள்… கண்டுகொள்ளாத அரசு… பரந்தூரில் நடப்பது என்ன?

February 12, 2023

கல்கி ஒரு சகாப்தம் – கல்கி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

September 9, 2022
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 20217 Views

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

May 27, 20213 Views

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

July 8, 20222 Views

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 20231 Views
Don't Miss

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

By NagappanNovember 14, 2023
SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து…


SHARE

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023

”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்

February 20, 2023
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo
About Us
About Us

Tamil News Website

Our Picks

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

May 31, 2022

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

September 24, 2021

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

September 16, 2021
Most Popular

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 20217 Views

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

July 8, 20222 Views

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

July 14, 20221 Views
Mei Ezhuththu
Facebook X (Twitter) Instagram Pinterest Dribbble
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
© 2025 Mei Ezhuththu Designed by ASK Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.