தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

SHARE

 கங்கைகொண்ட சோழபுர அகழாய்வின்போது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, அரண்மனையின் இரண்டாம் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை மூலம், 2020-21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகள்கடந்த ஆட்சியில் தொடங்கின.

அதன்படி, தமிழகம் முழுதும் கீழடி, ஆதிச்சநல்லுார், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன.

அந்த வகையில்,அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு என்னும் பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை பரவல்காரணமாக அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது, ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் கடந்த, 14ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியது.

ஏற்கனவேமாளிகை மேட்டில்அகழாய்வு நடத்திய போது பழங்கால ஓடுகள்,, இரும்பிலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள் கிடைத்து அவற்றை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

அது மட்டும் அல்லாது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர் கடந்த மாதம் கண்டறியப்பட்டது.

தற்போது மீண்டும் அகழாய்வுப் பணிகள் துவங்கிய நிலையில் அரண்மனையின் இரண்டாவது பாகமும் கண்டறியப்பட்டுள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் மாளிகைமேடு என்னும் பகுதியில் தான் அரண்மனை இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

அந்த வகையில் தற்போது அரண்மனையின் இரண்டாவது பாகம் கிடைத்திருப்பதுசோழர்களின் வரலாற்றினை இன்னும் அறிய உதவும்என்று தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

Leave a Comment