தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

SHARE

 கங்கைகொண்ட சோழபுர அகழாய்வின்போது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, அரண்மனையின் இரண்டாம் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை மூலம், 2020-21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகள்கடந்த ஆட்சியில் தொடங்கின.

அதன்படி, தமிழகம் முழுதும் கீழடி, ஆதிச்சநல்லுார், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன.

அந்த வகையில்,அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு என்னும் பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை பரவல்காரணமாக அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது, ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் கடந்த, 14ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியது.

ஏற்கனவேமாளிகை மேட்டில்அகழாய்வு நடத்திய போது பழங்கால ஓடுகள்,, இரும்பிலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள் கிடைத்து அவற்றை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

அது மட்டும் அல்லாது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர் கடந்த மாதம் கண்டறியப்பட்டது.

தற்போது மீண்டும் அகழாய்வுப் பணிகள் துவங்கிய நிலையில் அரண்மனையின் இரண்டாவது பாகமும் கண்டறியப்பட்டுள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் மாளிகைமேடு என்னும் பகுதியில் தான் அரண்மனை இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

அந்த வகையில் தற்போது அரண்மனையின் இரண்டாவது பாகம் கிடைத்திருப்பதுசோழர்களின் வரலாற்றினை இன்னும் அறிய உதவும்என்று தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

Admin

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

Admin

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… 4 மாவட்டங்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை அனுமதி

Admin

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

Leave a Comment