முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

சிங்காரவேலர்
SHARE

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளதன்படி, கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மு.வரதராசனார், ப.சுப்பராயன், இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோருக்கு சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு சிங்காரவேலரை மறந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் முன்வைத்து வாதங்கள் தொடங்கியுள்ளன.

இது குறித்து எழுத்தாளர் க.அரவிந்த்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

வங்க கவி இரவீந்திரநாத் தாகூருக்கு இராணி மேரிக் கல்லூரியில் சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தாகூருக்கு சிலை வைக்க மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சென்னை கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் இன்றைய வெலிங்டன் சீமாட்டி உயர்கல்வி மையம் தான் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் வீடு.

பதிவைப் பார்க்க: https://www.facebook.com/photo.php?fbid=6520989327919003&set=a.659749054043089&type=3

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D6520991654585437%26id%3D100000240022424&show_text=true&width=500" width="500" height="618" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

அந்த இடத்தில் ம.சிங்காரவேலருக்கு சிலை வைக்கவும், அந்த வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டவும் மீனவ சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தாகூருக்கு சிலை என அரசு அறிவித்துள்ளது.

கோரிக்கை வைக்காமலேயே சிலை வைக்கப்படும் நாட்டில், அந்த மண்ணின் மைந்தனுக்கு, உண்மையான புரட்சியின் நாயகனுக்கு சிலை வைக்க அரசுக்கு மனமில்லாதது ஏனோ?

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

“வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாசகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. சிங்கார வேலருக்கு சிலை வேண்டும், அவரது பங்களிப்பு மக்கள் மன்றத்தில் பேசப்பட வேண்டும்.”

இதனையொட்டி, கவனக்குறைவு என்றால் சரி செய்யப்பட வேண்டும் என்றும் கவனிக்கவே இல்லை என்றால் அரசு வருத்தம் உணர வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்.!!

Admin

என்ன மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு வரலாம்!: சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!.

பாலியல் வன்கொடுமை குற்றவாளியை சுட்டுப்பிடித்த சென்னை போலிஸ் – நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

Leave a Comment