முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

சிங்காரவேலர்
SHARE

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளதன்படி, கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மு.வரதராசனார், ப.சுப்பராயன், இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோருக்கு சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு சிங்காரவேலரை மறந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் முன்வைத்து வாதங்கள் தொடங்கியுள்ளன.

இது குறித்து எழுத்தாளர் க.அரவிந்த்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

வங்க கவி இரவீந்திரநாத் தாகூருக்கு இராணி மேரிக் கல்லூரியில் சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தாகூருக்கு சிலை வைக்க மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சென்னை கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் இன்றைய வெலிங்டன் சீமாட்டி உயர்கல்வி மையம் தான் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் வீடு.

பதிவைப் பார்க்க: https://www.facebook.com/photo.php?fbid=6520989327919003&set=a.659749054043089&type=3

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D6520991654585437%26id%3D100000240022424&show_text=true&width=500" width="500" height="618" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

அந்த இடத்தில் ம.சிங்காரவேலருக்கு சிலை வைக்கவும், அந்த வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டவும் மீனவ சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தாகூருக்கு சிலை என அரசு அறிவித்துள்ளது.

கோரிக்கை வைக்காமலேயே சிலை வைக்கப்படும் நாட்டில், அந்த மண்ணின் மைந்தனுக்கு, உண்மையான புரட்சியின் நாயகனுக்கு சிலை வைக்க அரசுக்கு மனமில்லாதது ஏனோ?

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

“வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாசகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. சிங்கார வேலருக்கு சிலை வேண்டும், அவரது பங்களிப்பு மக்கள் மன்றத்தில் பேசப்பட வேண்டும்.”

இதனையொட்டி, கவனக்குறைவு என்றால் சரி செய்யப்பட வேண்டும் என்றும் கவனிக்கவே இல்லை என்றால் அரசு வருத்தம் உணர வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

Admin

சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Admin

விரைவில் முதலமைச்சராகிறாரா உதயநிதி? – சட்டப்பேரவையில் அமைச்சர் எவ. வேலு சூசகம்

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண உதவி : தமிழக அரசு

Admin

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

நீட் தேர்வு பாதிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

Admin

Leave a Comment