முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

சிங்காரவேலர்
SHARE

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளதன்படி, கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மு.வரதராசனார், ப.சுப்பராயன், இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோருக்கு சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு சிங்காரவேலரை மறந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் முன்வைத்து வாதங்கள் தொடங்கியுள்ளன.

இது குறித்து எழுத்தாளர் க.அரவிந்த்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

வங்க கவி இரவீந்திரநாத் தாகூருக்கு இராணி மேரிக் கல்லூரியில் சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தாகூருக்கு சிலை வைக்க மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சென்னை கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் இன்றைய வெலிங்டன் சீமாட்டி உயர்கல்வி மையம் தான் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் வீடு.

பதிவைப் பார்க்க: https://www.facebook.com/photo.php?fbid=6520989327919003&set=a.659749054043089&type=3

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D6520991654585437%26id%3D100000240022424&show_text=true&width=500" width="500" height="618" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

அந்த இடத்தில் ம.சிங்காரவேலருக்கு சிலை வைக்கவும், அந்த வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டவும் மீனவ சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தாகூருக்கு சிலை என அரசு அறிவித்துள்ளது.

கோரிக்கை வைக்காமலேயே சிலை வைக்கப்படும் நாட்டில், அந்த மண்ணின் மைந்தனுக்கு, உண்மையான புரட்சியின் நாயகனுக்கு சிலை வைக்க அரசுக்கு மனமில்லாதது ஏனோ?

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

“வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாசகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. சிங்கார வேலருக்கு சிலை வேண்டும், அவரது பங்களிப்பு மக்கள் மன்றத்தில் பேசப்பட வேண்டும்.”

இதனையொட்டி, கவனக்குறைவு என்றால் சரி செய்யப்பட வேண்டும் என்றும் கவனிக்கவே இல்லை என்றால் அரசு வருத்தம் உணர வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Admin

வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’.. சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

முதல்வரை அறைவேன் எனக் கூறிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்!

Admin

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Admin

எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..சிக்குவாரா எச் ராஜா?

Admin

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!.

Admin

Leave a Comment