இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

SHARE

இந்திய நாட்டிற்கு என்று தனியாக தேசியமொழி எதுவும் கிடையாது என்று மத்திய அரசின் அலுவல் மொழிகள் துறை தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சில வட மாநிலங்களின் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்திருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மத்திய அரசின் அலுவல் மொழிகள் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்திய மொழிகள் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அதிகாரி இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது என்றும், அலுவல்மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவின் தேசிய மொழி இந்திதான் என்ற தவறான கருத்தும் பொதுமக்களிடையே தொடர்ந்து பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

ஜக்கியின் சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் : வலுக்கும் எதிர்ப்பு

Nagappan

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

Leave a Comment