சொன்னதை செய்தார் தங்கம் தென்னரசு!. நியாயமான விலையில் சிமெண்ட் விற்கப்படும் என உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு.

SHARE

தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களின் பொருளாதார வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெட்ரோல்,டீசல் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், கடந்த வாரம் சிமெண்ட் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையும் உயர்த்தப்படுவதாக கட்டுமான உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அந்த சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்ததோடு, கட்டுமான பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விலை உயர்வால் ஏழை,எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய விலையில் சிமெண்ட் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்ய தமிழ்நாடு
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment