குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

SHARE

குதிரை உடல் முழுவதும் பிஜேபி நிறத்தில் வர்ணம் பூசி, பிஜேபியின் சின்னத்தை வரைந்து வைத்து, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை கண்டித்து மேனகாகாந்தி புகார் அளித்துள்ளார்

மத்திய பிரதேசத்தில் முதல்வராக உள்ள (பாஜக)ம சிவ்ராஜ் சிங் சவுகான். அம்மாநிலத்தின் இந்தூர் நகரில் நேற்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடைபெற்றது

. இந்த யாத்திரையின் போது ஒரு குதிரைக்கு உடல் முழுவதும் பிஜேபி நிறத்தில் வர்ணம் பூசி, பிஜேபியின் சின்னத்தை வரைந்து வைத்து, ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

முன்னாள் நகராட்சி கார்ப்பரேட்டர் ராமதாஸ் கார்க், யாத்திரையில் குதிரையை வாடகைக்குக் கொண்டு வந்து, இப்படி அழைத்து சென்றார்.

குதிரையின் உடல் முழுவதும் வர்ணம் பூசி இப்படி கொடுமைப்படுத்தியிருப்பது கண்டு மேனகா காந்தியின் ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ (PFA)விலங்குகள் நல அமைப்பு இந்துார் கிளை நிர்வாகி, சன்யோகீதாகஞ்ச் கொதித்தெழுந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இன் கீழ் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய என்று அவர் புகாரில் தெரிவித் திருக்கிறார்.

மேலும், மத்திய அமைச்சருக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பி, ஒரு அமைச்சரே இப்படி நடந்துகொள்ளலாமா, இதை தடுத்திருக்க வேண்டாமா என கேள்விஎழுப்பியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

50 பேருக்கு மேல் கூட கூடாது.. குர்பானி கிடையாது.. யோகி போட்ட அதிரடி தடை..

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Admin

Leave a Comment