Author: இரா.மன்னர் மன்னன்

”பிக் பாஸ் தொடங்கி 40, 50 நாள்ல நடக்க வேண்டியது எல்லாம் இப்பவே நடக்குற மாதிரி இருக்கு. மற்ற சீசன்களை விட இந்த சீசன் ரொம்ப வேகமாவே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்” என்ற அறிமுகத்துடன் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார் கமல். வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் ஒளிபரப்பாகின. சமையல் அறையை கைக்குள் கொண்டு வந்தால், வீட்டையே தன் கைக்குள் கொண்டு வரலாம் என்ற மந்திரம் பிக் பாஸ் வீட்டிற்கும் பொருந்தும். தாமரையின் சமையலை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் பிரியங்கா மற்றும் அபிஷேக். ’சமையல் சூப்பர், இந்த சமையலுக்காகவே உன்ன இந்த வீட்ல இருந்து அனுப்ப முடியாம போயிடுமே’ன்னு பிரியங்கா தாமரையை பாராட்டினார். சமையலை பாராட்டிப் பேசிய உரையாடல், கொஞ்சம் கொஞ்சமாக சண்டையாக மாறியது. ’உப்பு இல்லைன்னு சொல்றதுக்கு சமையல் தெரிஞ்சிருக்கணுமா?’ என்ற இமானின் பேச்சுக்கு, ’நீங்க 16 பேருக்கும் சமைச்சு பாருங்க, உங்களையும் கிச்சன்ல…

Read More

”வாத்தி கம்மிங்…” பாடலுடன் ஆரம்பமானது நாள். என்னதான் அடிச்சு பிடிச்சு சண்டைப்போட்டாலும், காலையில் டான்ஸ் ஆடும்போது மட்டும்தான் எல்லரும் தங்களையே மறந்துடுறாங்க. ’மதுமிதா எல்லாம் இப்படி பேசி விளையாடுமா?’ – என்று இருந்தது பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கை. மதுமிதா மற்றும் நிரூப், நள்ளிரவு நடந்த சேட்டையின் தொடர்ச்சியாக பாத்ரூமில் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர். நேற்றைய எபிசோடில் முக்கிய நபராக இருந்தது பிரியங்கா. பசி பசின்னு பாவம் பத்து நாள் சாப்பிடாத மாதிரி கேட்டுக்கொண்டிருந்தார். இதில் பசியை தூண்டி விடும் விதமாக ‘கமல் சார் பிறந்த நாளுக்கு யாருக்கு என்னென்ன வேணும், மெனு கொடுங்க’ என்று இமான் கேட்க, பிரியங்காவும் ’எனக்கு ஐஸ்கிரீம், பர்கர், கூல் டிரிங்ஸ் எல்லாம் வேணும்’னு ஆர்டர் பண்ண ஆரம்பித்தார். ஒரு நேரத்திற்கு அப்புறம் பாவம் பிரியங்காவால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை, இமானை அணைத்து அழ ஆரம்பித்து விட்டார் பிரியங்கா. இமான் ஆறுதல் கூறி படுக்கச் சொன்னார். ’சரி,…

Read More

அழுதுகொண்டிருந்த அக்ஷராவுக்கு ஆறுதல் கூற கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக் பாஸ். ’எனக்கு கத்திப்பேசுனா பயம் வரும்… பிரியங்காவும் அபிஷேக்கும் அப்படித்தான் என்கிட்ட மாத்திமாத்திப் பேசுறாங்க… எனக்கு அப்படிலாம் பேச வராது. இவங்க என்னையே மாத்திடுவாங்கப் போல… நல்லவங்களா இருக்கிறது தப்பா…?’ என்று பிக் பாஸிடம் அழுது கொண்டே புலம்பினார் அக்ஷரா. பிக் பாஸும் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பினார். கார்டன் ஏரியாவில் அபிஷேக், பிரியங்கா, நிரூப் பேசிக்கொண்டிருந்தனர். ’நாம எப்படியாவது டாப் 5க்கு போயிடணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் அபிஷேக். ’நாம மூனு பேரும் ஒன்னாவே இருந்து மத்தவங்க, ‘நாமளும் அந்த கேங்க்ல இருக்கணும்’னு நினைக்குற அளவுக்கு விளையாடணும்’ என்று கொஞ்சம் ஜாக்கிரதையாவே பேசினார் பிரியங்கா. இப்படியே நாள் முடிய ‘ஆலுமா டோலுமா…’ பாடலுடன் தொடங்கியது அடுத்த‌நாள். கிச்சனில் பிரியங்கா சமைத்துக் கொண்டிருக்க, இமான் அண்ணாச்சி டைனிங் டேபிளில் இருந்து பிரியங்காவை கலாய்க்கும் விதமாகப் பேசி காண்டேத்த, பதிலுக்கு பிரியங்காவும்…

Read More

தமக்கென்று இறையாண்மை அதிகாரத்தை அடையப் போராடும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறுகளாக விளங்குபவை மரபுவழிப்பட்ட நிலம், அரசு, தாய்மண்ணையும் மக்களையும் போற்றும் கலை இலக்கியப் பண்பாடு, தலைசிறந்த இன ஓர்மை முதலியனவாகும். இந்நூல் இமயம் முதல் குமரி வரை பேரரசாக‌ தமிழன் வாழ்ந்த பொற்காலம் முதல் தற்போதைய 21ஆம் நூற்றாண்டில் தனது தாய்நிலத்தில் திரும்பும் திசையெங்கும் வேற்றினத்தார் ஆதிக்கத்தில் தமிழன் சிக்குண்டு வாழும் இருண்டகாலம் வரை தமிழர் வரலாற்றைப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர்கள் தங்களது நிலப்பரப்பை எவ்வாறு இழந்தனர்? யாரிடம் இழந்தனர்? என்பதை இலக்கியம், கல்வெட்டு, நில வரைப்படம் முதலிய சான்றுகளோடு தெளிவாக விளக்குகிறது. கடந்தகால வரலாறு தெரியாதவர்களுக்கு எதிர்காலம் இல்லை. தமிழன் தன் மண்ணை இழந்த வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும் முதல் தமிழ்த்தேசிய நூல் இதுவே. இழந்த வரலாற்றை பேசுவதோடு அல்லாமல் இழந்த நிலங்களை மீட்டு புதியதொரு தேசம் படைக்கவும் வழிகாட்டுகிறது இந்நூல். தமிழ்த்தேசியம் குறித்தும்…

Read More

பஞ்சதந்திரம் டாஸ்க் ஆரம்பித்த நாளே முடியவில்லை என்பதால், அன்றிரவில் இருந்தே ஆரம்பித்தது பிக் பாஸ். வீட்டுக்கு வெளியிலேயே அமர்ந்திருந்தனர் இசை, தாமரை, சின்னப்பொண்ணு ஆகியோர். வெளியில் இருந்த நாணயத்திற்கு வந்த அபிஷேக் ’இத நான் எடுத்துகுறேன் கத்தாதீங்க’ன்னு சொல்ல, ’அதெல்லாம் முடியாது, நான் கத்துவேன்’னு இசை சொல்ல… ’லூசு உனக்கு தாண்டி எடுக்குறன்’னு சொன்னார் அபிஷேக். அதற்கு இசையும் ஒன்னும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார். அப்படினா எனக்கு உதவி வேணும்னு சொல்லாமல் சொல்கிறாரா இசை?. இந்த பஞ்சதந்திரம் டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து, யார் நாணயத்தை எடுத்தாலும், இது இசைக்காக, இது சின்னபொண்ணுக்காக, இது தாமரைக்காக என்று வரிந்துக்கட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தால், நீங்கள் பலவீனமானவர்கள் என்று சொல்லாமல் சொல்வதுபோல் அல்லவா உள்ளது…? அப்படி அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்றால், நாணயம் எடுக்க தடுமாறுகிற அவர்களுக்கு, நாணயம் எடுத்த யாருமே “இது உனக்காகதான் எடுத்தேன் நீயே வெச்சிக்கோ, நீ ஒளிச்சி வெச்சாலும் நான் எடுக்கமாட்டேன்”னு…

Read More

முந்தின நாள் இரவில் ஆரம்பித்தது பிக் பாஸ், இரவில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் என‌ மூவர் கூட்டணியினர் பேசிக்கொண்டிருந்தனர். ‘நான் ஏன் சிபிக்கு மாலை போட்டேன் என்றால், ராஜூவுக்கு என்ன மவுசு இருக்குன்னு பாக்கத்தான்’ என்று பிரியங்கா கூற, ‘அவன் சைலண்ட்டா இருந்து ஒரு கேம் ஆடுறான்’ என்று அபிஷேக்கும் கூற, ராஜு மேல் இவர்களுக்கு இருக்கும் காண்டு பச்சையாக தெரிந்தது. “சின்ன மச்சான்.. செல்ல மச்சான்.. ஊருக்குள்ள உங்கள ஏசுறாக…” பாடலுடன் தொடங்கியது நாள். அதைப் பார்க்கும் போது ராஜூவிற்கு பிக் பாஸ் எதையோ சூசகமாக சொல்கிறாரோ? – என்றுதான் தோன்றியது. ஆனால் அந்த பாடலுக்கு ராஜூ மற்றும் தாமரையின் ஆட்டம் அருமை. பாவ்னி, ராஜூவின் கிச்சன் பிரச்சனை அடுத்த நாளும் பேசப்பட்டது. (அட இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி… யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு…) அக்ஷரா வழக்கம்போல் ராஜூவிற்கு ஆதரவாகவும் பாவ்னிக்கு எதிராகவும் பேசினார். இப்படியே பேசி பேசி மாலை…

Read More

“சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்” பாடலுடன் நாள் தொடங்கியது. அக்ஷரா வெளியில் இருந்த வருணிடம் மூவர் குழுவில் இருந்து வருண் தப்பித்தக் கதையையும், வருணுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் கூறி, அவற்றை சரி செய்துக் கொள்ளுமாறும் சொன்னார். கிச்சனில் நேற்றைய சாப்பாடு கெட்டு போனதாக இமான் சொல்ல, நல்லா இருக்கு இப்போ சாப்டா ஓகே, கொஞ்ச நேரம் விட்டா கெட்டுப்போயிடும்னு சுருதி சொல்ல, இப்போ சாப்பிட முடியாதுனா, அந்த சாப்பாட்ட வடகம் போட்டுடலாம்ன்னு சுருதி முடிவு பண்ண, தாமரையும் சரி என்று கூறினர். அடுத்து பிக் பாஸ் இந்த வாரத்தின் தலைவர் போட்டிக்கு போட்டியிட, கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் சரியான நேரத்திற்கு வந்த ஹவுஸ்மேட்ஸ் மட்டுமே போட்டியிட முடியும் என்று கூறி அவர்கள் யார் என்றும் அறிவித்தார். ராஜூ, பாவ்னி, சிபி, இசை இந்த நால்வர் மட்டுமே இந்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிட தகுதி பெற்ற நபர்கள். அதற்கான‌ டாஸ்க், இந்த…

Read More

பிக் பாஸ் நல்லாத்தான் போயிட்டு இருக்கா?-ன்னு பலருக்கும் தோன்றிய‌ கேள்வியை கண்டு, அதற்கு பதில் சொல்லும் விதமாக ‘இந்த வருடமும் பிக்பாஸ் நல்லாத்தான் போயிட்டு இருக்கு’ன்னு நிகழ்ச்சியை ஆரம்பித்தார் கமல். அகம் டிவி வழியாக வீட்டிற்கு சென்ற கமல், பிக் பாஸ் முந்தின சீசனை பார்த்துள்ளீர்களா? என்ற கேள்வியோடு உரையாடலை ஆரம்பித்தார். பலரும் பல பதில்கள் கூற, முழு பூசணிக்காயை மறைக்கும் விதமாக ‘நான் பார்த்ததே இல்லை’ என்று கூறினார் அபிஷேக். அவர் வீடியோ வைரல் ஆனது அவருக்கு தெரியாது இல்லையா… பாவம்… அடுத்து யார் யாரோட கதைகள் உங்களுக்கு பிடித்தது, எந்தக் கதைகளில் ஈடுபாடில்லை என்று கேட்டு கொஞ்சம் நேரத்தை ஓட்டினார் கமல். பின்னர் நாமினேஷனில் உள்ள ஐவரை ஒன்றாக உட்கார வைத்து, ஒவ்வொருத்தராகக் காப்பாற்றினார். இறுதியில் ஐக்கி மற்றும் நாடியா இருக்க, ஐக்கியை காப்பாற்றினார் பிக் பாஸ். இதனால் இந்த வாரம் வெளியேறியது நாடியா சாங். நாடியா சாங்…

Read More

கமலின் வருகையுடன் ஆரம்பித்தது பிக் பாஸ். பண்டிகை தினங்களின் கொண்டாட்டம், கேளிக்கைகளால் மக்களின் அன்பும் சந்தோஷமும் அதிகரிக்கரிக்கிறது, வியாழக்கிழமை விடுப்பட்டவைகளையும், வெள்ளிகிழமை நடந்தவைகளையும் காணலாம் என்று கூறி திருவிழா நாடகம் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினர் கமல். நாடகம் நடக்கும்போதே மன்னிப்பு கேட்டாச்சேன்னு விடாமல், சின்னபொண்ணு நள்ளிரவு வரை பிரச்னையை இழுத்து சென்றார். அபிஷேக் அதன் பிறகு சின்னபொண்ணுவிடம் வந்து நடந்தவற்றை விளக்கி மறுபடியும் மன்னிப்பு கேட்டார். வீட்டில் காணாமல் போனவர்கள் பட்டியலில் மதுமிதா பெயர் இருப்பது மதுமிதாவிற்கு தெரியவர, ’என்னை டார்கெட் செய்கிறார்கள்’ என்று பாத்ரூமில் பாவ்னியிடம் கூறினார். அதற்கு பாவ்னி, ’யாரையும் நம்பாதே, இங்க எல்லாரும் டபுள் ரோல் பிளே பண்றாங்க’ ன்னு ஆறுதல் கூறினார். ’நான் இனிமே தான் என் ஆட்டத்தை ஆரம்பிக்கப்போறேன்’ன்னு மேடையிலேயே நடக்க ஆரம்பித்தார் அபிஷேக். விடிந்தவுடன் மூவர் குழு இறுதி முடிவு எடுக்க ஒன்று கூடினர். ஜொலிப்பவர்களில் ராஜூவை தட்டி அந்த இடத்தில்…

Read More

“சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…” பாடலுடன் தொடங்கியது நாள். பெட்ரூமில் பிரியங்கா மற்றும் நிரூப் மைக் போட்டுக் கூட சத்தமே வராமல் பேசிக்கொண்டிருந்தார்கள். ஏதோ லவ் மேட்டர் பத்தி பேசுறாங்கன்னு தெரியுது, ஆனா யார் அந்த ரெண்டு பேர்ன்னு தெரியல (லவ் பண்ற அளவுக்கு இந்த வீட்ல ஆளுக்கலே இல்லையே, யாரு யார லவ் பண்றாங்கன்னே புரியல… எல்லா ஆம்பளைங்களும் கல்யாணம் ஆனவங்க, நிரூப்ப தவிர.. வேற யாரா இருக்கும்….?). ’வைல்ட் கார்டு எண்ட்ரியா ஒரு பொண்ணு வந்தா நல்லா இருக்கும்’னு நிரூப் கேட்க, ’எந்த மாதிரி பொண்ணு உங்களுக்கு வேணும்’னு பிரியங்கா கேட்க, ’அழகா, மத்தவங்க பொறாமைப்படுற அளவுக்கு இருக்கணும்’னு சொல்ல, ’இந்த பிரியங்கா மேட்ரிமோனில சொல்லிட்டீங்கல.. உங்களுக்கு நல்லபடியா அமையும், மேட்டர் உன்னோடது மணி என்னோடது’ ன்னு பிரியங்கா சொல்ல… இந்த் பிக் பாஸ் வீட்ல என்ன தாண்டா நடக்குது மொமண்ட். கடைசியாக கதை சொல்லட்டுமா டாஸ்க்குக்கு வந்தவர்…

Read More