- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முதல் நிலை நிறுவனமாக உள்ளது அமேசான். இந்த நிறுவனத்தில் வாங்கப்படும் பொருட்களை இந்த நிறுவனத்தின் விநியோகப் பிரிவு ஊழியர்களே வீடுகளில் கொண்டுபோய் சேர்க்கின்றனர். அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 15 அமெரிக்க டாலர்கள் என்ற ஊதியத்தைக் கொடுத்தாலும், இதுவரை அவர்கள் ஒன்றாக இணையவோ, சங்கம் எதையும் அமைத்துக் கொள்ளவோ அனுமதிக்கவில்லை. ஆனாலும் அதன் சம்பளத் தொகைக்காக பலரும் அமேசானில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் வின்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மார்க் போகேன் என்பவர், ‘அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களை பாட்டில்களில் சிறுநீர் கழிக்க வைக்கிறது, அதிக சம்பளம் கொடுப்பதால் மட்டுமே அமேசான் சிறந்த பணிச் சூழல் நிலவும் இடமாக மாறிவிடாது’ என்று கடந்த மார்ச் 25ஆம் தேதி டுவிட்டரில் பதிவிட்டார். இந்த டுவிட் அமெரிக்காவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் போகேனின் இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்த…
நீட் தேர்வு குறித்த அச்சத்தால் 2017ஆம் ஆண்டில் முதன்முதலாக தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவி அனிதா. இவர் தற்போது அதிமுகவுக்கு வாக்கு கேட்பதைப் போன்ற மாற்றியமைக்கப்பட்ட காணொலி ஒன்று தமிழக அமைச்சரும் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலின் அதிமுக வேட்பாளருமான மாஃபா.கே.பாண்டியராஜனின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை பகிரப்பட்டு இருந்தது. இந்தக் காணொலி தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சற்று நேரத்தில் அந்தக் காணொலி திடீர் என நீக்கப்பட்டது. பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த மாஃபா பாண்டியராஜன், அந்தக் காணொலியைத் தான் பதிவேற்றவில்லை என்றும், தனது டுவிட்டர் கணக்கை யாரோ தவறாகப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும், அப்படி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார். முன்னர் பாஜகவின் தமிழக நிர்வாகிகளில் ஒருவரான ஹெச்.ராஜாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை வந்தபோது, அந்த டுவிட்டை தான் போடவில்லை என்றும், தனது அட்மின்தான் போட்டார் என்றும் ஹெச்.ராஜா விளக்கம்…
தமிழ் இலக்கியங்களில் பிணி என்ற சொல் பல இடங்களில் காணப்படுகிறது. நாம் பேசும்போது பிணி என்ற சொல்லை சில இடங்களில் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். கருவுற்ற பெண்ணை ‘கர்ப்பிணி’ என்றும், பசியை ‘பசிப்பிணி’ என்றும், பிறவியை ‘பிறவிப் பிணி’ கூறும் வழக்கம் இன்றும் மக்களிடம் காணப்படுகிறது. பெரும்பாலான அகராதிகள் பிணி என்ற சொல்லுக்கு நிகரான சொல்லாக நோய் – என்ற சொல்லைக் காட்டுகின்றன. ஆனால் இரண்டும் ஒரே பொருள் கொண்டவை அல்ல!. இந்த இரண்டு சொற்களுக்குள் என்ன வேறுபாடு?. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – என்கிறோம் ஆனால் பிணியற்ற வாழ்வை அப்படிக் கூறிவிட இயலாது. ஏனென்றால் பிணி என்பது தேவையான தவிர்க்க இயலாத துன்பமும் கலந்த ஒரு அனுபவம். அதாவது நோயைப் போல பிணி முழுதும் தேவையற்ற ஒன்று அல்ல!. உதாரணமாக பிறவி என்பது பிணிதான் என்றாலும், பிறவி இல்லை என்றால் முக்தி ஏது? ஒரு பெண் கருவுறுவது பிணிதான்…
மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் எதிர் பதிவுகளுக்கு பிரபல யூடியூப் வலைக்காட்சியான நக்கலைட்ஸ் பதில் அளித்து உள்ளனர். அரசியல் நையாண்டி காணொலிகளைத் தொடர்ந்து வெளியிடும் பிரபல யூ டியூப் வலைக்காட்சியான நக்கலைட்ஸ் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் அரசியலைக் கேலி செய்து ‘உன்னால் முடியாது தம்பி’ என்ற காணொலியை வெளியிட்டனர். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பல வகைகளிலும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இன்னொரு பக்கம் உன்னால் முடியாது தம்பி காணொலியும் யூ டியூபில் பிரைவேட் காணொலியாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்க்க இயலாதபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்தக் காணொலியின் பல பகுதிகள் சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸப்பிலும் வைரலாகி வருகின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் இது குறித்த செய்திப் பகிர்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் நக்கலைட்ஸ் நிர்வாகம் இந்த சர்ச்சை குறித்த தங்கள் தரப்பு பதிலை தங்கள் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில்…
தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டுவிட்டரில் நடிகர் மாதவன் தகவல் வெளியிட்டுள்ளார். இந்திய ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி ’ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற திரைப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி, நடித்து உள்ளார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்காகப் பலரும் நடிகர் மாதவனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தனது டுவிட்டர் கணக்கில் ரசிகர்களுக்கு பதில் அளித்த மாதவன், வழக்கமாக தனிப்பட்டமுறையில் நன்றி சொல்லும் தன்னால் இப்போது அப்படிச் செய்ய இயலவில்லை என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி மாலை தனது குடும்பத்தில் உள்ள 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்தியத் திரையுலகில் அமீர்கான், ரன்பீர்கபூர், சூர்யா உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு ஆளான நிலையில், மாதவனின் இந்தப் பதிவு திரைப்பட ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி…
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைகின்றது. எனவே இதற்குப் பின்னர் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யக் கூடாது, மீறினால் அது குற்றமாகக் கருதப்படும். இது குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும்வரை கட்சிகள் எந்தத் தேர்தல் பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தக்கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை, வானொலி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் ஆகியவற்றிலும் தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமும் பிரச்சாரம் செய்யக்கூடாது. இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. நமது நிருபர்
கடந்த 24 மணிநேரங்களில் உலக அளவில் அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பெற்று உள்ளது!. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 92,998 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு அடுத்து அமெரிக்காவில் 65,200 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும், இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 514 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் 1931 பேரும், அமெரிக்காவில் 793 பேரும், போலந்தில் 571 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கையில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,484,127 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 164,655 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் புதிய கொரோனா அலை வலிமையடைந்து வருவதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்குக் கூறுகின்றன. எனவே மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…
மக்கள் மத்தியில் இன்றும் புழங்கும் பழந்தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் ’தற்குறி’ என்பது. ஆனால் அதன் பொருள் நம்மில் பலருக்கும் தெரியாது. திரைப்படங்களில் ‘அய்யா… நான் படிப்பறிவில்லாத தற்குறிங்க ஐயா…’ என்பது போன்ற வசனங்கள் இடம் பெறுவதால், கல்வி அறிவின்மையோடு தொடர்புடைய சொல் இது என்பது வரையில்தான் சாமானிய மக்களால் ஊகிக்க முடிகின்றது. உண்மையில் தற்குறி என்ற சொல்லுக்கான தெளிவான பொருள் என்ன?. காகிதங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்புவரை பனை ஓலைகள், செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள் – ஆகியவைதான் ஆவணங்களாகப் பயன்படுத்தப்பட்டன. சொத்துகள் விற்கப்படும்போது அரசர்கள் காலத்திலும் இப்போது உள்ள முறையைப் போன்றே பத்திரம் தயாரித்து, தொடர்புடையவர்களும், சாட்சிகளும் கையெழுத்தும் போட்டார்கள். இந்தப் பத்திரங்கள் பொதுவாகப் பனை ஓலைகளால் ஆனவைதான். பனை ஓலைகள் அழியலாம் என்ற அச்சம் இருப்பவர்கள் ஓலையில் உள்ள அதே செய்தியைப் பட்டயங்களிலோ, கல்வெட்டுகளிலோ பிரதி எடுத்துக் கொள்வார்கள். இப்படியாக ஆவணங்களை உருவாக்கும்போது, இவற்றில் கையெழுத்திட வேண்டியவர்களில் யாராவது படிப்பறிவு அற்றவர்களாக…
உயர்ந்த மனிதர்களை நாம்தான் எப்போதும் தேடிப் போகவேண்டும் என்பது இல்லை. சில நேரங்களில் உயர்ந்த மனிதர்கள் நம்மைத் தேடியும் வருவார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு மதிக்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். சில நேரங்களில் குணத்திலும் பண்பிலும் சிறியவர்கள் நமக்கு எட்டாத தொலைவில் இருப்பார்கள், அவர்களை நாமே போய் சந்திக்க வேண்டிய தேவை இருக்கும். இதை மட்டுமே வைத்து அந்த சிறியவர்களை நாம் பெரியவர்கள் என நம்பிவிடக் கூடாது. எத்தனை நபர்களைத் தானே போய் பார்த்தாலும் பெரியவர்களுக்கு அதனால் இழிவும் கிடையாது, எத்தனை பேர் சிறியவர்களை வந்து சந்தித்தாலும் அதனால் சிறியவர்களுக்கு சிறப்பும் கிடையாது. இதற்கு நமது வாழ்க்கையிலேயே ஒரு உதாரணம் இருக்கிறது. நமது வயிற்றுக்கு நன்மை செய்யும் பால், மோர், தயிர் எல்லாம் நமது தெருவுக்கு வந்து விற்கப்படுகின்ரன. அவையே நம்மை வந்தும் அடைகின்றன. இதனால் அவற்றின் பெருமை குறைந்துவிட்டதா? கள்ளானது அது இருக்கும் இடத்திலேயே விலை போகிறது. அதனால்…
அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு – என்று நடிகர் கமல்ஹாசன் பிரசாரத்தில் குறிப்பிட்டது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. நடைபெற உள்ள பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின் போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனக்கு அசையா சொத்துகள் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலும், அசையும் சொத்துகள் ரூ.45 கோடியே 9 லட்சத்து 1,476 மதிப்பிலும் உள்ளன எனவும், தனது மொத்த சொத்துகள் ரூ.176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 மதிப்புள்ளவை என்றும் 50 கோடிக்கு கடன்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ‘தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் ஒருவர்’ என்று வேட்பு மனுத் தாக்கலின் போது அவர் குறிப்பிடப்பட்டார். அந்நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய கமல்ஹாசன் ’அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு’ என்று பேசியதால் சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள்…