நோய், பிணி – இரண்டு சொற்களுக்கும் என்ன வேறுபாடு?

SHARE

தமிழ் இலக்கியங்களில் பிணி என்ற சொல் பல இடங்களில் காணப்படுகிறது. நாம் பேசும்போது பிணி என்ற சொல்லை சில இடங்களில் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். கருவுற்ற பெண்ணை ‘கர்ப்பிணி’ என்றும், பசியை ‘பசிப்பிணி’ என்றும், பிறவியை ‘பிறவிப் பிணி’ கூறும் வழக்கம் இன்றும் மக்களிடம் காணப்படுகிறது. 

பெரும்பாலான அகராதிகள் பிணி என்ற சொல்லுக்கு நிகரான சொல்லாக நோய் – என்ற சொல்லைக் காட்டுகின்றன. ஆனால் இரண்டும் ஒரே பொருள் கொண்டவை அல்ல!. இந்த இரண்டு சொற்களுக்குள் என்ன வேறுபாடு?.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – என்கிறோம் ஆனால் பிணியற்ற வாழ்வை அப்படிக் கூறிவிட இயலாது. ஏனென்றால் பிணி என்பது தேவையான தவிர்க்க இயலாத துன்பமும் கலந்த ஒரு அனுபவம். அதாவது நோயைப் போல பிணி முழுதும் தேவையற்ற ஒன்று அல்ல!.

உதாரணமாக பிறவி என்பது பிணிதான் என்றாலும், பிறவி இல்லை என்றால் முக்தி ஏது? ஒரு பெண் கருவுறுவது பிணிதான் ஆனால், அது இன்றேல் பரம்பரை ஏது? பசியும் ஒரு பிணிதான் ஆனால் பசி இல்லை என்றால் வாழ்க்கை ஏது? – அதனால் பிணி என்பது மனிதர்களுக்கு தேவையான ஒன்று.

மறுபக்கம் நிலத்தின் வளக்குறைவால் ஏற்படும் நோய்களுக்கும் பிணி என்ற பெயர் வழங்கி உள்ளது. திருக்குறளில் ‘பிணியின்மை’ என்ற சொல் ‘நிலநலம் இன்மையால் ஏற்படும் நோய் இல்லாமல் இருத்தல்’ என்ற பொருளிலும் புழங்கி உள்ளது. நோய் என்ற சொல்லுக்கு இப்படி வேறு பொருட்கள் கிடையாது!.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

சீல் வைக்கப்பட்ட மதுரை ஆதீனம் அறை… சொந்தம் கொண்டாடிய நித்யானந்தா

Admin

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

இராமாயணத்தின் இப்படி ஒரு காண்டம் இருக்கிறதா? தியாகக் காண்டம் தெரியுமா?

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

Leave a Comment