- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
வீட்டிலேயே கொரோனா தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்து உள்ளது. கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில், பரிசோதனைகளை அதிகரிப்பதும் முக்கிய பணி ஆகும். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் சங்கிலி உடைபடும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எனவே பரிசோதனைக்கு மத்திய-மாநில அரசுகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் கொரோனா தொற்றை சுயமாக வீட்டிலேயே கண்டறிவதற்கான கருவி ஒன்றை புனேவை மையமாக கொண்டு செயல்படும் மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் லிட். நிறுவனம் தயாரித்து உள்ளது. ‘கோவிசெல்ப் கிட்’ எனப்படும் இந்த ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்ட் (ஆர்.ஏ.டி.) கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கருவியை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதன் விலை சுமார் ரூ.450 எனவும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. மேலும், இந்த கருவியை பயன்படுத்தும் முறை…
தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை எனவும், தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கெளசல்யா அருண்
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டவ்-தே புயலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த மாநில பேரிடா் மீட்புக் குழு ஆணையா் ஹா்ஷத் குமாா் படேல், டவ்-தே புயல், குஜராத் மாநிலத்தின் கிா்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. இறுதியாகக் கிடைத்த தகவல்படி, இந்த புயல் பாதிப்புக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை மொத்தம் 53 போ் உயிரிழந்தனா். சுவா் இடிந்து விழுந்ததால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்தார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த பிரதமா் மோடி ரூ.1,000 கோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும், புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தாா். இது மட்டும் இன்றி குஜராத் மாநில அரசு சாா்பில்…
தமிழகத்தில் 24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2ஆவது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் இந்தநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், கொரோனா தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மேலும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
தனது அப்பாவை வேலை பார்க்க விடாமல் மீண்டும் மீண்டும் மடிக் கணினியைத் தட்டிவிடும் சுட்டிக் குழந்தையின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்ரனர். சர்வதேச ஆய்வுகள் வீட்டில் இருந்து பணியாற்ருவது என்பது அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதை விடக் கடினமானது என்கின்றன. அதில் ஒரு சுமை இருந்தாலும், சில நேரங்களில் அந்த சுமை சுகமாகவும் உள்ளது. அந்த வகையில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஒரு தந்தை தனது சுட்டிக் குழந்தையிடம் வேலையைப் பார்க்க விடுமாறு கெஞ்சியும், அதைக் கேட்காத குழந்தை மீண்டும் மீண்டும் மடிக் கணினியைத் தட்டிவிடும் ஒரு காணொலி இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நமது நிருபர்.
காலச் சக்கரத்தை நாம் சுழற்றும் போது இருட்டு மட்டுமே அதில் அதிகம் புலனாகிறது. போதுமான வெளிச்சம் நமக்கு கிடைப்பதில்லை. மன்னர்களின் பெருமைகளை, வெற்றிகளை மட்டுமே பேசுவது வரலாறு என்று நாம் பழகி வந்துள்ளோம். மன்னர்கள் தேசத்தின் நிர்வாகிகள் மட்டுமே. அந்த நிர்வாகத்தின் கீழ் பல சமூக இனக்குழுக்கள் பல அடுக்குகளாக உள்ளன. இவை தான் தேசத்தின் வரலாற்றை தாங்கி பிடிக்கும் அஸ்திவாரங்கள். இவற்றின் வலிமை தான் வரலாற்றை யுகங்கள் தோறும் பேச வைக்கிறது. சமூகத்தின் அடிநிலை மக்களைப் பற்றிய வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்படும் போது தான் ஒரு தேசத்தின் உண்மையான வரலாறு புலனாகும். இதனை பெரும் முயற்சியில் மட்டுமே அகழ்ந்து பார்த்து தெரிந்து கொள்ள முடியும். அதற்கான பெரிய வெளிச்சக் கீற்றைத்தான் சுளுந்தீ கசிய விட்டுள்ளது. மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கரிடம் (1662 – 1682) தளபதியாக இருந்த அப்பய நாயக்கரின் மகன் கதிரியப்ப நாயக்கர் தான் இந்நாவலின் மையக்…
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. இதில் நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது. ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள இந்த இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள் என தி ஹாம்ப்ஷைர் கவுண்டி கிளப் தலைவர் ராட் பிரான்ஸ்குரோவ் கூறியுள்ளார். கௌசல்யா அருண்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள், தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி ஒதுக்கீடு மட்டும் குறைவாக இருப்பது ஏன் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மருந்து, தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்திய நீதிபதிகள் 2aaவது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என…
சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள் காண்பித்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தொற்றைக் குறைக்கவும் ஏப்ரல் மாதம் முதலே கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதில் சவுதி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சவுதியில் இதுவரை 1.1 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் அரசு அலுவலங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இல்லாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கெளசல்யா அருண்
கேரளா முதல்வராக பினராயி விஜயன் 2ஆவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில் எல்டிஎப் கூட்டணி மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மீதமுள்ள 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது. இதனால் மீண்டும் பினராயி விஜயன் முதல்வராவது உறுதியான நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 18 நாட்கள் கழித்து, இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.