- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஒ.பன்னிர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்தச் செயலை, இந்தக் கருவியால், இவன் முடிக்க வல்லவன் என்பதைத் தெரிந்து கொண்டு அவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு முரணாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும்,பள்ளி மாணவ, மாணவியருக்கு தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதும் தான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால்,பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாகப் பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரிகமற்ற கருத்துக்களை, தவறான கருத்துக்களை, ஒழுக்கமற்ற கருத்துக்களை மக்கள் மனங்களில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை வாடிக்கையாகக்…
கேரளாவில்ஜிகா வைரஸ் பாதிப்பு 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில் மேலும்13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியாகியுள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை சேர்ந்தது என அம் மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது, ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது, டீசல் விலை ரூ.100 யை நெருக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பி வருகின்றனர். விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘ஒரு வழியாக 100 ரூபாயை எட்டி விட்டது. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டு தான் சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சைக்கிளுக்கு மாற வேண்டுமென மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்த அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று கூடுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொறுப்பேற்கிறார். தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால், தமிழக மாநில பாஜக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வந்தது. தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பொறுப்பேற்கிறார்.
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மயோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான வழக்கமான பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்த ரஜினி தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். அதிகாலை 3 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்த ரஜினிக்கு அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைவா.. தெய்வமே என ரசிகர்கள் கோஷமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலங்கானா அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. கொரோனாவால் இந்திய அரசின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகள் அதனை மீட்க புதுவிதமான முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா அரசு கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. மக்கள் மதுக்கடைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் உரிமம் பெற்ற மதுக்கடையில் வாரம் ஒரு நாள் இலவசமாக மது வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதன்பின் குறிப்பிட்ட அளவுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
வங்கதேசத்தில் உலகிலேயே குள்ளமாக கருதப்படும் பசுவை காண மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வங்கதேச தலைநகர் டாக்கா அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் ராணி என்ற பசு 51 செ.மீ. உயரம், 66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதுதான் உலகிலேயே குள்ளமான பசுவாக கருதப்படுகிறது. இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ கொரோனா விதிமுறைகளையும் மீறி இந்தப் பசுவை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். பலர் பசுவுடன் செல்ஃபி எடுத்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ. ஆகும். இந்நிலையில் 51 செ.மீ. உயரமுள்ள ராணி பசுவுக்கு உலகின் குள்ளமான பசு என்ற அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 72வது பிறந்தநாள் விழா நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புலிவேந்துலாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் சமாதியில் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்கிருந்து ஹைதராபாத்துக்கு வந்த ஜெகனின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார். மேலும் இளம் பச்சை மற்றும் நீல வர்ணத்தில் உள்ள கட்சி கொடியும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் நடுவே தெலங்கானா மாநில வரைபடமும், மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் படமும் இடம் பெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவானதில் முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளதாகவும், ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் ஆந்திராவின் பொற்காலம் என்றும் நிகழ்ச்சியின் பேசிய ஒய்.எஸ். ஷர்மிளா தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நடிகர் சூர்யா தனது கருத்தை பதிவு செய்திருந்ததை எதிர்த்து தமிழக பாஜக இளைஞர் அணி நடிகர் சூர்யாவிற்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் பாஜகவை எதிர்த்தும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பதிவில், ‘எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும். தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப்பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன்.’ என அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும்,கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தைஉளப்பூர்வமாக வரவேற்கிறேன். சூர்யாவின் இந்நிலைப்பாட்டுக்கு நாம்…