Author: Admin

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், மாணவர்கள் சேர்க்கை உயர்த்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கொரோனா 2ம் அலை தொடங்கியதால்,மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டதோடு,பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதேப்போல் தமிழகத்திலும்…

Read More

விஜய் மற்றும் அஜித் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை. எப்பொழுதும் சமூக வலைதளங்களில் மோதல் போக்கு இருந்துக் கொண்டேதான் இருக்கும். இந்த நிலையில், வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார் . இந்த சொகுசு காருக்கு நுழைவு வரிசெலுத்த நடிகர் விஜய்க்கு வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார். ஆனால் நடிகர் விஜய் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோவாக இருக்க கூடாது, என விஜய்யை வரி கட்ட அறிவுறுத்தியதுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த நிலையில்…

Read More

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அரசு அமைத்த குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்தது. இதற்கான அரசாணை ஜூன் 10 ஆம் தேதி வெளியானது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கரு.நாகராஜன் அரசியல் பிரமுகர் என்ற அடிப்படையிலும், விளம்பர நோக்கத்திற்காகவும்…

Read More

தமிழகத்திற்கு ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஜூலை 8ம் தேதி வரை, தமிழ்நாட்டுக்கு 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு செலுத்துவதற்காக 29 லட்சத்து 18 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்காக 1கோடியே 30 லட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும், இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அம்மாநிலத்தின் 18 முதல் 44 வயதுடையவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசி ஒதுக்க வேண்டுமென…

Read More

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி மாணவர்களிடம் எழுந்தது. இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று இணையத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இருப்பினும் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக…

Read More

நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி மாணவர்களிடம் எழுந்தது. இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று இணையத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Read More

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் வேளையில் தற்போது ஜிகா வைரசும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் பாதிப்பு உள்ளதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லைப்பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், ஜிகா வைரஸ் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து, பி.சி.ஆர். பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் தொற்றைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

Read More

தமிழ்நாட்டில் இனி ஊடகவிவாதங்களில் பங்கேற்க கூடாது என்ற முடிவை அதிமுக எடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கழக தலைவர்களின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தலைப்புகளை வைத்து ஊடகங்களில் விவாதங்களை நடத்துகிறார்கள். எங்களுக்கு இது மன வருத்தத்தை கொடுக்கிறது. எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதனால் அதிமுக இனி ஊடக விவாதங்களில் ஈடுபடாது என கூறியுள்ளனர். மேலும், அதிமுகவின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டும் யாரையும் ஊடக விவாதங்களில் அடையாளப்படுத்த வேண்டாம் . அதிமுகவின் பெயரை எந்த வகையிலும் பிரதி பலிக்கும் வகையில் யாரையும் விவாதத்திற்கு அழைக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஜூலை 4 ஆம் தேதி முதல் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதாக ஹைதராபாத் விஞ்ஞானி விபின் ஸ்ரீவாஸ்தவா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா உலகையே ஆட்டி படைத்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை விரைவில் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கலாம் என ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் விபின் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். அவரின் கருத்து படி: இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது போல, ஜூலை 4-ஆம் தேதியே நாட்டில் மூன்றாம் அலை தொடங்கி இருக்கலாம் என கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா 2 ம் அலை…

Read More

தனக்கு அமெரிக்க குடியுரிமை இருந்தாலும் தன் மனதின்இந்தியா என்பதுஆழமாக பதிந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை . ‘நான் குடியுரிமை அளவில் அமெரிக்கனாய் இருந்தாலும் என்னுள் இந்தியா ஆழமாக உள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் ‘சமூக வலைதளங்களின் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்துகின்றன. அதே சமயம்கூகுள் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு முறையாக செயல்படுவதாக’ கூறியுள்ளார்.

Read More