Author: Admin

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவற்றின் வெற்றி குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கமளித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இன்று ‘ஆல ஓல’ பாடலும், ‘தீங்கு தாக்கா’ பாடலும் வெளியாகின. இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு பாடலையும், மிகப்பெரும் உழைப்பில், அதிக நேரம் செலவழித்து உருவாக்கினோம் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் “ரகிட ரகிட” பாடல் வெளியான போது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து அப்பாடல் மீட்டதாக கூறியது பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் கூறினார்.

Read More

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைதொடர்ந்து ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் 2 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.- மூவேந்தன்

Read More

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாவலர், கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மூன்று முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி, கடந்த 28 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் நோக்கில் தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் சென்று முன்னாள் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிகண்டனின் பாதுகாப்புப் காவலர், கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை அடையாறு அனைத்து மகளிர் கவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Read More

ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய 25 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், அதனை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், மக்கள் அனைவரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் இந்த நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என அவர் தெளிவாக அறிவித்திருந்தார். அதன்படி இன்றுவரை சுமார் 280 கோடியே 20 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தினை கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கவும், மற்ற மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் திரவ ஆக்சிஜனை கண்டெய்னரில் கொண்டு வரும் வகையில் கண்டெய்னர்கள் வாங்கவும் 50 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை…

Read More

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தி வந்தாலும், மறுபுறம் மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றும்போது முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களாகவே மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொடர்பாக தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினார்.- மூவேந்தன்

Read More

பேமிலி மேன் 2 தொடருக்கு தடைவிதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் பிரபலமான ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 3ம் தேதி அமேசானில் வெளியானது. இந்தப் படம் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்தது இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டணம் தெரிவித்த நிலையில், ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, வேல்முருகன் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.- மூவேந்தன்

Read More

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து இவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அரச குடும்பத்திலிருந்து விலகி, அரச குடும்பத்திற்கு உரிய அடையாளங்களை துறந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வருகின்றனர் ஹாரி மேகன் தம்பதியினர். ஏற்கனவே இந்த தம்பதிக்கு 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ராணியின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி (நேற்றுமுன்தினம்) இந்த தம்பதிக்கு கலிபோர்னியாவில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஹாரி, மறைந்த தனது தாயார் டயானாவின் பெயரை சூட்டியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரி ஒரு இணைய நிகழ்சி ஒன்றில் தான் இளம் வயதில் தனது அம்மாவின்(டயானா) மரணத்தால் மனம் வெறுத்து போய்…

Read More

திடீரென்று அதிகமானோர் இ- பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ- பதிவு இணையதளம் முடங்கியது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பரவல் குறைய தொடங்கியதால், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மளிகை கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு செல்ல இ- பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு செய்ய இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய தொடங்கியதால் இணையதளம் முடங்கியது. இதனால் ஏராளமானேர் ஏமாற்றமடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் இணையதளத்தில் உள்ள பிரச்சினை சரிசெய்யபட்டு செயல்பாட்டிற்கு வந்தது.

Read More

நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு “கூ” செயலி தனது பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி பதவி வகிக்கிறார்.சமீபத்தில் இவர் நைஜீரியாவில் 1967 முதல் 70 வரை நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி இந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தள நிறுவனமான கூ, நைஜீரியாவில் கால்பதித்து, ட்விட்டர் போன்ற தகவல் தொடர்பு சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Read More

பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்களை வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன் வீடுகளுக்கு சென்று வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டது டெல்லி அரசு. ஆனால் மத்திய அரசு 5 முறை இத்திட்டத்தை மறுத்து விட்டது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், கொரோனா பரவல் உள்ள இந்த சமயத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தொற்று பரவும் மையமாக ரேசன் கடைகள் மாறும் என தெரிவித்தார் முதல்வர். மேலும் பீட்சா, ஸ்மார்ட் போன்கள் மற்றும் துணிகள் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன்…

Read More