- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது : பேரவையில் கடுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கொரோனோ சமயத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த போது மின் கட்டணத்தை முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் மொபைலில் புகைப்படம் எடுத்து மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் அறிவித்தோம். ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு மே மாத கட்டணத்தை செலுத்த சொன்னதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறினார். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இந்த கேள்விக்கு பதில் கூறிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: மின் கட்டணத்தை செலுத்த மக்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறினார் . மேலும் மே மாதம் மின் உபயோகம் 32 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் குறைவாகவே கட்டணத்தை வசூலித்ததாக கூறினார். பின்னர் தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் மிகை மாநிலமாக இருப்பதாக தெரிவித்த அதிமுக அரசு, ஏன் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகள் வழங்கவில்லை என கேள்வி…
பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருட்களில் இனி அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தக் கூடாது; இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இலவச புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு மாணவ்ர்களின் புத்த்க பைகளில் புகைப்படங்களை நீக்காமல் விநியோகித்தது. இதுதொடர்பாக பேரவையில் பேசிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், புகைப்படங்களை மாற்ற 13 கோடி செலவாகும் என்று தாம் கூறியதாகவும், அப்படியென்றால் அவர்கள் படமே இருந்துவிட்டு போகட்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தலைவர்களின் படங்கள் புத்தகப் பைகளில் எதற்கு என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்குப் பதிலளித்த தமிழ்கஅரசு வழக்கறிஞர்…
இன்று சட்டசபையில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் : கொரோனா பரவல் காரணமாக வரும் 30ம் தேதி வரை மக்கள் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திருக்கோயில்களில் மொட்டை போடும் 1,749 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி செழியன் மற்றும் நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதில் பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மையா? ஆம் எனில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருக்கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால்…
கவனக்குறைவு என்றால் சரி செய்யப்பட வேண்டும் என்றும் கவனிக்கவே இல்லை என்றால் அரசு வருத்தம் உணர வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ள
இனி குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் தான் ஜாமீன் கொடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு காரணமாக பீர் பாட்டிலால் சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மதுபாட்டிலால் நண்பரை தாக்கிய வழக்கில் ஜாமின் கேட்டு சிவா, கார்த்திக் ஆகிய இரண்டு பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தனது தீர்ப்பில் : மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
இறங்கினேன்… உடன் யாருமற்று, உதவி கேட்க மொழி தெரியாமல் நான் மட்டும் இந்த ஊரில். இனி நடக்கப்போகும் நல்லது கெட்டத்துக்கெல்லாம் நான் மட்டுமே காரணம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை தற்கொலை செய்து கொண்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை இரட்டை தலைமைகளான ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல் வெளியானது. கட்சியை ஒற்றை தலைமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் வெளியான தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள திமுக ஆதரவாளரும் திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சென்று விடுவார் என தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக கட்சியில் தீர்மானம் நிறைவேற்றாதது, அவரை விமர்சிக்காதது என அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவையெல்லாம் ஓபிஎஸ் சசிகலாவிடம்…
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இசையுலகில் ஒரு சகாப்தம் என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல உயரிய விருத்துக்கு சொந்தக்காரரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் மீசையில்லாமலே அனைத்து இடங்களிலும் தோன்றுவார். இதனால் எப்போது பார்த்தாலும் அவர் சின்ன இளைஞரைப் போல் காணப்படுவார். தற்போது பார்த்திபனின் இரவின் நிழல், சிம்புவின் வெந்து தணியும் காடு என பல படங்களுக்கு இசையமைத்து ஏ.ஆர்.ரஹ்மான் வருகிறார். இதனிடையே துபாயில் இசையமைப்பு தொடர்பான வேலைகளுக்காக சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீசையுடன் இருக்கும் போட்டோவை முதன்முறையாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஜூம் மீட்டிங் ஆப்பில் மீசையுடன் இருக்கும் போட்டோ…நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.இந்த போட்டோவை இதுவரை ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.