Close Menu
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Mei EzhuththuMei Ezhuththu
Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
Mei EzhuththuMei Ezhuththu
Home » கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை
நூல் அறிமுகம்

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

இரா.மன்னர் மன்னன்By இரா.மன்னர் மன்னன்May 8, 202102 Mins Read0 Views
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Reddit Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
SHARE

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும்? நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அக்கால கட்டத்தில் மக்கள் எப்படிபட்டவர்களாக இருந்திருப்பார்கள்? என ஏராளமான கேள்விகளுக்கு விடைகளை அள்ளித் தருகிறது எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய ’ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவல்.

3000 ஆண்டுகள் காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்றி நம்மை கற்பனைக் குதிரைகளின் வண்டிகளில் பூட்டி நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்திற்கு அழைத்து செல்கிறான் ஆதன். யார் இந்த ஆதன்? எதற்காக அவன் இவற்றையெல்லாம் நம்மிடம் சொல்கிறான்? விடைகளை எளிய நடையில் அழகியலோடு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நாவலாக்கி தந்துள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். சிறார் இலக்கியத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்து வரும் இவருடைய எழுத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு வரலாற்றையும் அவற்றின் தொன்மையையும் இந்நாவலின் வழியாக கடத்தியுள்ளார்.

கீழடி அகழாய்வின் மூலமாக 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்வியல்களை நாம் அறிந்து கொண்டு வருகிறோம். நாம் அறிந்தவற்றை நம் குழந்தைகளுக்கு சரியாக கடத்திட இந்நாவல் துணைசெய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கீழடியில் இருக்கும் கந்தசாமி மாமா வீட்டிற்கு விருப்பமில்லாமல்  செல்லும் கேப்டன் பாலுவிற்கு கிடைக்கும் சுடுமண் பொம்மையின் உரிமையாளன் ஆதன், கேப்டன் பாலுவை 3000 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்கிறான்.

தான் சந்திக்கும் நிகழ்வுகள் கனவா நினைவா என புரியாமல் தவிக்கும் கேப்டன் பாலுவின் கைகளை நேசத்துடன் பிடித்து தான் வாழ்ந்த காலத்திற்கு அழைத்து சென்று வரலாற்றின் மீது காதல் கொள்ள செய்கிறான் ஆதன்.

3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கீழடியின் செழிப்பையும் கட்டமைப்பையும் மக்களின் வாழ்வியலையும் கண்ட பாலு வரலாற்றின் ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் கண்டு ரசிக்கிறான்.

சாதி, குலம், வர்ணமற்ற சமூகமாக வாழ்ந்த முன்னோர்களின் வாழ்வியல்களை ஆதன் எடுத்துரைக்க ஆச்சரியத்தின் விளிம்பிற்கு சென்று திரும்புவது பாலு மட்டுமல்ல வாசிக்கும் நாமும் தான்.

உண்மை வரலாற்றை உடைத்துச்சொல்கிறான் ஆதன். வரலாற்றை மீள் வாசிப்பு செய்ய கேள்விகளை எழுப்பும்படி அன்பு கட்டளையிடுகிறான் ஆதன்.

ஆதனுடன் அந்துவனாக கேப்டன் பாலு சிந்து சமவெளி காலத்திற்கு செல்கின்றனர். சிந்துவிலிருந்து மூட்டை முடிச்சுகளோடு மனதில் ஆயிரமாயிரம் கேள்விகளோடும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்கின்றனர். ஏன் இந்த இடப்பெயர்வு?

எங்கிருந்தோ இடம்பெயர்ந்து வந்தவர்கள் காலம் காலமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மேல் ஏன் குரோதம் கொண்டனர்? மனிதர்கள் மேல் அந்த மனிதர்களுக்கு ஏன் அத்துணை வன்மம்? இடம் பெயர்ந்து நடந்து நடந்து தங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்கியவர்களின் வாழ்வியல் சிறப்பம்சங்கள் என்ன? – விடை அறிய ஆதனின் பொம்மையோடு பயணம் செய்திடுங்கள். உண்மை வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சரியான ஆதாரங்களோடு கற்றுத்தந்திட இந்நாவல் உதவிடும்.

ஆதனின் பொம்மையை உருவாக்கிட துணை நின்ற ஆதார நூல்களின் பட்டியலை இறுதியில் பதிவு செய்து வாசிப்பின் வாசலை விசாலமாக்கியுள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். தேடல் எனும் பயணத்திற்கான சரியான பாதை வாசிப்பு.

வகை: இளையோர் நாவல்

எழுத்தாளர்: உதயசங்கர்

பதிப்பகம்: வானம்

பக்கங்கள்: 96

விலை: ரூ.76

– ரா.சண்முகலட்சுமி (முகநூல் பதிவு)


SHARE
Aathanin pommai book book review ஆதனின் பொம்மை கீழடி நூல் மதிப்புரை
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
இரா.மன்னர் மன்னன்
  • Website

Related Posts

இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘பணத்தின் பயணம்’ – நூல் அறிமுகம்:

August 17, 2022

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

January 6, 2022

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

December 30, 2021
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 20231 Views

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

July 14, 20221 Views

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

July 8, 20221 Views

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

June 2, 20221 Views
Don't Miss

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

By NagappanNovember 14, 2023
SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து…


SHARE

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023

”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்

February 20, 2023
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo
About Us
About Us

Tamil News Website

Our Picks

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

May 31, 2022

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

September 24, 2021

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

September 16, 2021
Most Popular

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

July 14, 20221 Views

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

July 8, 20221 Views

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

June 2, 20221 Views
Mei Ezhuththu
Facebook X (Twitter) Instagram Pinterest Dribbble
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
© 2025 Mei Ezhuththu Designed by ASK Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.