World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

கடிதம்
SHARE

ஒலிக்கு உருவம் கொடுத்தால் எழுத்துகள். இந்த உருவம் முழுமை பெறும் இடமாக இருந்தவைதான் கடிதங்கள். ஆம், ஏறக்குறைய அழிந்துபோய்விட்ட கடிதம் எழுதும் கலையை நினைவுபடுத்திக் கொள்ளும் நாளாகவே இந்த கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) ஆண்டுதோறும் செப்டம்பர்1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

அன்புக்குரியவர்களுக்கு தகவல் சொல்ல, தகவல் பெற ஒரே ஊடகமாக இருந்த கடிதங்கள், வேலை முடிந்த பிறகு ஆவணங்களாகவும் காலப் பொக்கிஷங்களாகவும் பாதுகாக்கப்பட்டன.

அனுப்பி அழித்துவிடும் மெசேஜுகளைப் போல் அல்லாமல், உணர்வுகளின் பெட்டகமாக கடிதங்கள் விளங்கின.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலகாபாத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடிதம் எழுதும் தினம்
கடிதங்கள்



அப்போது, தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், தன்னுடைய அந்தப் 10 வயது மகளுக்கு , இந்தப் பூமியின் கதை, பூமியிலுள்ள நாடுகளின் கதைகள், இயற்கையின் வரலாறு, உலக நாகரிகங்களின் தோற்றம் உள்ளிட்டவற்றை எல்லாம் சுருக்கமாக எழுதினார்.

10 வயது மகளுடன் நேரம் செலவிட இயலாத நிலையில் நேரு இருந்தாலும், தனது மகளுக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். அதன்மூலம், அவர், தனது மகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்.

பின்நாட்களில் ஆவணமாக ஆன அந்தக் கடிதங்கள்தான் அன்றைய குழந்தை இந்திராவை இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக மாற்ற அச்சாரமிட்டன.

அதுபோக காந்தி-டால்ஸ்டாய் கடிதங்கள், சாவர்க்கரின் எரவாடா சிறைக் கடிதம், அம்பேத்கர்-ரமாபாய், அம்பேத்கர் -சவிதா இடையிலான கடிதங்கள் என வரலாற்றில் சம்பவ விவரிப்பு மற்றும் சமூக நிலைப் புரிதலுக்கு கடிதங்கள் பெரும் உதவியாக விளங்குகின்றன.

அன்புக்குரியவர்களுக்கு உங்கள் அன்பை தொட்டு உணர வைக்கும் ஒரு வழி உண்டு என்றால் அது கடிதம் எழுதுவது மட்டுமே…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனாபலி 42 லட்சம் ? சர்சைக்குள்ளான அமெரிக்க பத்திரிகை

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்.. முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்

Admin

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

சே குவேரா எனும் புரட்சித் தீ! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

Admin

அதிமுக தோழர்களே… தொடரும் ஸ்டாலின் நாகரிகம்

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 8

Pamban Mu Prasanth

Leave a Comment