தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

SHARE

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு புதிய தலைவலியாக தீவிரவாத அமைப்பு ஒன்று அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் விலக்கி கொல்லப்பட்டதையடுத்து அங்கு தலிபான்கள் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் உயிர் வாழ பயந்து வேறு நாடுகளில் தஞ்சம் அடைய விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்திற்குன் ஐஎஸ்ஐஎஸ்-கே என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வானொலிக்கு தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேட்டியளித்துள்ளார். அதில் எங்களது படையினர் தங்கியிருக்கும் இடத்திலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தாலிபான் குழுவினரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து காபூல் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

அங்கு அவர்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் ஆபத்து உள்ளதாகவும் ஜபியுல்லா கூறியுள்ளார்.

உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சுமார் 20 வகையான பிரிவுகள் உள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவுதான் ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ எனப்படும் ‘கோராசன்’ பிரிவு என்பது குறிப்பிட்டத்தக்கது.

இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கும் தாலிபான் தீவிரவாதிகளை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

Admin

ஆப்கானிஸ்தானில் ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Admin

இடது கையின் பின்னே இவ்வளவு இருக்கா? – சர்வதேச இடது கை நபர்கள் தின சிறப்புக் கட்டுரை!.

சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா..6300 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பிய பெண்கள்- வைரல் வீடியோ

Admin

சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

Admin

தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Admin

அப்புறம் அடுத்த ஸ்கெட்ச் யாரு? : சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணம் …விரைவில் 3ம் பட்டியல்?

Admin

எங்களை கைவிட்டு விட்டுவிடாதீர்கள்… கதறும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

சீன அரசின் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஊடக உலகின் உயரிய விருது!

Admin

Leave a Comment