கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

SHARE

விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் நினைவாக, மனைவி அவருக்கு கோவில் கட்டி பூஜை செய்து வழிப்பட்டு வரும் நெகிழ்ச்சி சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே விவசாயம் செய்து வந்த தம்பதி அங்கி ரெட்டி- பத்மாவதி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தில் கணவர் அங்கி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் உயிரிழப்பிற்கு பின் விவசாய பணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த கணவனின் நினைவாகவே இருந்த மனைவி பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர், தனக்கு கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது கணவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகனிடம் கூறியுள்ளார் தாய் பத்மாவதி. மகனும் தாயின் விருப்படியே விவசாய நிலத்தில் மறைந்த தந்தையின் சிலையை நிறுவி கோவில் கட்டி கொடுத்துள்ளார்.

அதனைதொடர்ந்து தினமும் கணவரின் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் மனைவி பத்மாவதி, கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார். கணவனே கண்கண்டதெய்வம் என்று கோவில் கட்டி பூஜை செய்யும் பத்மாவதியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

துணை ஜனாதிபதி கணக்கில் ப்ளூ டிக்கினை நீக்கிய டுவிட்டர்.. காரணம் என்ன?

Admin

Leave a Comment