பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

SHARE

பருவநிலை மாற்றத்தால் விரைவில் வெப்பநிலை உயரும் என ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான குழு சமர்பித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான காலநிலை மாற்றங்களுக்கான இந்த குழுவில் இந்தியா உட்பட மொத்தம் 195 நாடுகளின் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழு தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், பருவநிலை மாற்றம் என்பது பூமியின் அனைத்து பகுதிகளையும் அடைந்து விட்டது என்றும் , இது மனிதர்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக வெப்பமயமாதல் அதிகரிக்கும் போது தான் அதன் தாக்கங்கள் தீவிரமடையும். அதன்படி 2050 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் புவியின் வெப்பம் 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது உள்ள சூழலில் 2030 ஆண்டில் இருந்தே புவி வெப்பமடைதல் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பெரும் முயற்சி எடுத்து பருவநிலையை காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டால், 2100 ஆம் ஆண்டு இந்த 1.5 சதவீத வெப்பநிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தெற்காசியாவில் அதிக வெப்பநிலை, இயற்கை பேரிடர்கள், காட்டுத்தீ, புயல், வெள்ளம் போன்றவை சர்வ சாதாரணமாக ஏற்படும் என்றும், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் பனிமலை வெடிப்புகள், பனிக்கட்டி சரிவுகள் அதிகம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடல்மட்ட அளவு குறைந்தபட்ச அளவில் 55 செமீ ஆகவும், அதிகபட்ச அளவில் 76 செமீ ஆகவும் உயரக் கூடும் என்றும், சென்னை, மும்பை போன்ற கடலோர நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் இந்த அறிக்கையை, “மனிதகுலத்திற்கான கோட் ரெட் குறியீடு” என்று குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… உலக சாதனை படைத்த பெண்..

Admin

வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?

Admin

வாய்க்கு போடும் பூட்டு.. உடல் எடையை குறைக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

ரொம்ப தப்பு பண்ணுறீ ங்க… ஆப்கனில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

Admin

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

பொய் பேசும் நரையெல்லாம் மை பூசி மாத்திக்கோ… 100வது வயதை எட்டிய 3 மூதாட்டிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்..!!

Admin

சீனாவை ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்: ஜின் பிங் ஆவேச பேச்சு

Admin

Leave a Comment