புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

SHARE

பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதிப்பெயர்களை நீக்கி அவர்களின் அடையாளத்தை அரசு சிதைக்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்களிலும், மற்ற நூல்களிலும், தலைவர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சமீபத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன.

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் என்பதற்கு பதில் உ.வே. சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரை தமிழக அரசு நீக்கியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும் எனக் கூறியுள்ளார். தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

சட்டம் என்பது குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல… நடிகர் சூர்யா

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

Leave a Comment