என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

SHARE

தனது வீட்டில்தான் ஐடி ரெய்டு நடக்கும் என எதிர்பார்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என முயற்சி நடந்து வருவதாக கூறிய அவர் என் வீட்டில்தான் ரெய்டு நடக்கும் என முதலில் எதிர்பார்த்ததாகவும் நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் என கூறினார்.

மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4 ஆண்டுகள் பதவியில் நீடிக்க தங்கமணியும், நானும் முக்கிய காரணமாக இருந்ததால் என் மீது திமுகவின் கவனம் செலுத்தினார்கள், கோவை பிரச்சாரத்திலும் அதை வெளிப்படுத்தினார்கள்.

என் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன், அனைத்து அதிமுகவினரும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தன்வீட்டில்தான் ரெய்டு நடக்கு என எதிர்பார்த்ததாக வேலுமணி கூறியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

மீசை கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழகுதான் போல…இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்….

Admin

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

ஐ.பி. எல் விளையாட்டு போல நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்- அண்ணாமலை விமர்சனம்

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

நீட் தேர்வு பாதிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

Admin

Leave a Comment