மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

SHARE

சேலத்தில், மகளிருக்கான இலவச பயணச் சீட்டை, வடமாநில பயணிகளுக்கு கொடுத்து மோசடி செய்த பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக, கட்டணம் இல்லாமல், மகளிர் என அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் ரயில்நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் அரசு பேருந்தில், வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர்.

பேருந்து ஐந்துரோடு பகுதியில் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் 26 பேருக்கு, மகளிர் பெயர் அச்சிடப்பட்ட இலவச பயணச் சீட்டை கொடுத்து, நடத்துனர் நவீன்குமார், பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நடத்துனரின் மோசடி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நவீன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி… மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Admin

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

Leave a Comment