விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

SHARE

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.வரி என்பது நன்கொடையல்ல. அது நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.


சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

நீதிபதியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில் விஜய்க்கு கார்த்தி சிதம்பரம் எம்
பி., முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் வரி ஏய்ப்பு செய்வதற்கும், வரியை திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விஜய் வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்துள்ளார். அவர் யாரையும் ஏமாற்றவில்லையே?.

வரியில் இருந்து விதிவிலக்கு கேட்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமை.

இந்தியாவில் பெரிய பெரிய பணக்காரர்கள் பலர் வரிவிலக்கு கேட்டிருக்கிறார்கள். கேட்டுக் கிடைத்தால் சந்தோஷப்படப்போகிறார்கள். இல்லையென்றால் கட்டப்போகிறார்கள்.

ஆனால், ரீல் ஹீரோ என்று உள்நோக்கம் கற்பிக்க என்ன நோக்கம் இருக்கிறது? என சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விஷயத்தில் விஜய்யை விட்டு விட்டு அவருக்கு ஆலோசனை சொன்னவர்களை குறை சொல்லியிருக்கலாம். மேலும் இதில் சமூக நீதி எங்கிருந்து வந்தது? . வரி சட்டங்களைப் பொறுத்தவரை நீதிபதிகள் கண்டிப்பாக இருப்பது சரியானதுதான்.

ஆனால் அவரின் தனிப்பட்ட கேரக்டரை டேமேஜ் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நான் நீதிபதியாக இருந்திருந்தால் இந்தமாதிரி தீர்ப்பை கொடுத்திருக்கமாட்டேன் என்றும் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

சிவசங்கர் பாபா சிறை செல்வார்… அன்றே கணித்த யாகவா முனிவர்

Admin

இனிமே மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவுக்கு ரூ.600 இல்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Admin

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

Leave a Comment