கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

SHARE

கொரோனாவுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் அமல்படுத்தின. மேலும் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது.


தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்நிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


அண்மையில் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதால், இளம்பருவத்தினருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.


இந்தநிலையில், இது தவறான தகவல் என்றும், தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு விஞ்ஞான பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் நிரூபிக்கப்படவுமில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடுப்பூசிகளானது விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, அதன் செயல்திறன் மற்றும் பக்கவிளைவுகளை நன்கு ஆராய்ந்த பின்னரே, மனிதர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

“மிகப்பெரிய திட்டம் வருது” … மோடியின் சுதந்திர தின உரையில் வெளியான அறிவிப்பு

Admin

Leave a Comment