யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

SHARE

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது என கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மனிதர்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைக்கும் ஆற்றலை கொண்டது யோகா. தினமும் யோகா செய்வதன் மூலம் உடலும் மனமும் சாந்தம் பெரும்.

இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசினார் அப்போது, யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை என்றும் பல ராஜ்ஜியங்களாக இருந்தது என்றும் கூறினார்.

நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம் என்றும் ஆனால் இந்தியப் பிரதமர் மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார் என்றும் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

Admin

நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

Admin

கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

Pamban Mu Prasanth

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

Leave a Comment