பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

SHARE

சிறுமிகளை, பெண்களை ஆபாசமாக பேசி யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வழக்கில் கைதான பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை பிரைவேட் சர்வர் மூலமாக விளையாடி, அதை யூடியூப் வலைதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்து வந்தவர் மதன்.

இவரது யூடியூப் சேனலை பின்தொடர்பவர்கள் பப்ஜி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ளவர் தான் என்று கூறப்படுகிறது.
இந்த யூடியூப் சேனலில் பெண்களை பற்றி ஆபாசமாக பேசி தனது யூடியூப் பக்கத்தில் பதிவுகளை மதன் வெளியிட்டு வந்தார். இதன்மூலம் லட்சக்கணக்கில் பணத்தையும் சம்பாதித்துள்ளார்.

இது குறித்து மதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக்ரபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்தார்.

சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

மதன் மீது 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய சைபர் கிரைம் தனிப்படை போலீசார், அவரது சொந்த ஊரான சேலம் விரைந்தனர். ஆனால் சேலத்தில் அவர் இல்லை.

மதனை தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தர்மபுரியில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், நேற்று காலை மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து ஆடி சொகுசு கார், 4 லேப் டாப்கள் மற்றும் டிரோன் கேமரா ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

மதனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களிலும் ஆபாசமாக பேசியது மதன் தான் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மதன் தற்போது பூந்தமல்லி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இனி அசைவ உணவகங்களிலும் அரசுப் பேருந்தை நிறுத்தலாம்! – உத்தரவைத் திருத்தியது தமிழக அரசு!.

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி.. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியோர், புகழேந்தி அதிரடி நீக்கம்

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் …. கமல்ஹாசன்

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

பாலியல் வன்கொடுமை குற்றவாளியை சுட்டுப்பிடித்த சென்னை போலிஸ் – நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

Leave a Comment