சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

SHARE

பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியை 3 மாத கைக்குழந்தையோடு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, ஆசிரியை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். இதே பள்ளியில் பயின்று தற்போது ஆசிரியையாக பணியாற்றி வரும் சுஷ்மிதா, பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிற்கு விருந்தாக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக எளிய குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளை குறிவைத்து, அவர்களை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை சுஷ்மிதாவை, செங்கல்பட்டு கூடுதல் அமர்வு மகிளா நீதிபதி சங்கீதா இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுஷ்மிதாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கினார். இதனால் அவர் தமது 3 மாத ஆண் குழந்தையோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை வைத்தே 10 அல்லது அதற்கு கீழ் படிக்கக்கூடிய மாணவிகளை அழைத்து வரச்சொல்லி, அந்த மாணவிகளிடம் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை – தமிழக அரசு எதிர்ப்பு

Admin

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Leave a Comment