சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

SHARE

பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியை 3 மாத கைக்குழந்தையோடு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, ஆசிரியை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். இதே பள்ளியில் பயின்று தற்போது ஆசிரியையாக பணியாற்றி வரும் சுஷ்மிதா, பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிற்கு விருந்தாக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக எளிய குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளை குறிவைத்து, அவர்களை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை சுஷ்மிதாவை, செங்கல்பட்டு கூடுதல் அமர்வு மகிளா நீதிபதி சங்கீதா இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுஷ்மிதாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கினார். இதனால் அவர் தமது 3 மாத ஆண் குழந்தையோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை வைத்தே 10 அல்லது அதற்கு கீழ் படிக்கக்கூடிய மாணவிகளை அழைத்து வரச்சொல்லி, அந்த மாணவிகளிடம் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்… முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

பேரிடர் ஆபத்தா? இந்த வாட்ஸப் எண்ணில் சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு

Admin

என்ன கொடுமை சார் இது… அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி

Admin

கொரோனாவை விரட்ட .. ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி.. வைரலாகும் வீடியோ!

Admin

Leave a Comment