சிவசங்கர் பாபாவின் பள்ளியை மூட கோரி பரிந்துரை…!!

SHARE

சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நல குழுமம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.

தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளிக்க சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டதால் சிபிசிஐடி அதிகாரிகள் டேராடூன் சென்றனர். ஆனால் போலீசார் அங்கு வருவதை தெரிந்து கொண்ட சிவசங்கர் பாபா அங்கிருந்து டெல்லிக்கு தப்பிச் சென்றார்.

இருப்பினும் தனிப்படை போலீசார் அவரை டெல்லியில் வைத்து இன்று கைது செய்தனர்இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய சென்னை கேளம்பாக்கம் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நம்ப வேண்டாம் ’’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Admin

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்… முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

Leave a Comment