ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

SHARE

தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் இருந்ததற்காக அம்மனுக்கு கூழ் ஊற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் காப்பாற்றியதாக ஊர் மக்கள் ஒன்று கூடி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை கொண்டாடியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள நெருப்பாண்ட குப்பம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அந்த கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

இதனால் 101 குடங்களில் மேளதாளம் முழங்க மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அங்குள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது.

மேலும் கூழ் ஊற்றி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஊர் அடங்கை மீறி கூடியதாக இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

இறக்குமதி வரியை குறைத்தால் போதும் : மதன்கெளரிக்கும் விளக்கம் கொடுத்த எலான் மஸ்க்

Admin

சென்னை திரும்பினார் ரஜினி.. விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள்

Admin

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

Admin

Leave a Comment