கொரோனா நிவாரணமாக ரூ.2,000 , 14 வகை மளிகைப் பொருட்கள்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…

SHARE

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட கொரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகை மற்றும் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக மே மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்தத் தொகையை சுமாா் 2.07 கோடி பேர் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருள்கள் ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

இதற்கான டோக்கன் ஜூன் 11 ஆம் தேதி முதல் வரும் 14 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று வழங்கப்பட உள்ளது.

மேலும் இதனை கூட்ட நெரிசல் இல்லாமல் பெற்றுக்கொள்ள வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு காலத்தில் இந்து மகா சபா என்றால்..தேவாரமும் திருவாசகமும் தான்ஆனால் இப்போது?? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

Admin

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

Admin

பேரிடர் ஆபத்தா? இந்த வாட்ஸப் எண்ணில் சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

சொன்னதை செய்தார் தங்கம் தென்னரசு!. நியாயமான விலையில் சிமெண்ட் விற்கப்படும் என உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு.

Admin

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

Leave a Comment