குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

SHARE

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையில் சிக்கி தவிக்கின்றனர். 3 ஆம் அலை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் முன்றாம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ள, விரல்களில் ஆக்சிமீட்டரை பொறுத்தி 6 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும்.

இதில் குழந்தைகளின் ஆக்சிஜன் அளவு அதீதமாக குறையும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க கூடாது என்றும் கொரோனா தொற்றால் கடுமையான மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஸ்டெராய்டு மருந்துகளை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு

Admin

Leave a Comment