காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

SHARE

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி, ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியும், தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

மேலும், இந்தியாவில் இருந்து சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக மகாராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாயை ஆஷிஷ் லதா பெற்றுள்ளார்.

ஆனால் சொன்னபடி ஆஷிஷ் லதா செய்யாததால், தொழிலதிபர் மகாராஜ் ஆஷிஷ் லதா மீது பண மோசடி புகார் அளித்தார். 2015 இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஷிஷ் லதாவுக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,தற்போது அந்த வழக்குக்கான தீர்ப்பு வெளியாகி உள்ளது அதில்ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு தென்னாப்பிரிக்க டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மேல்முறையீடு செய்ய முடியாத படி அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

மீண்டும் கொரோனா..தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

நிற வெறிப் படுகொலைக்கு ரூ.196 கோடி இழப்பீடு!

Admin

ஆப்கானிஸ்தானில் ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… உலக சாதனை படைத்த பெண்..

Admin

‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் நீங்கள்’ – பெண்கள் குறித்து தாலிபான்கள் சர்ச்சை கருத்து

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

தாலிபான்கள் ஆட்டம் ஆரம்பம்: விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை

Admin

Leave a Comment