அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

SHARE

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் பங்கேற்காதது பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: சசிகலா ஆடியோ குறித்து விளக்கம் அளித்தார்.

அதிமுகவினரிடம் சசிகலா பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி, திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் ஓபிஎஸ் மாவட்ட செயலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். ஓ.பன்னீர் செல்வத்திற்கும் தமக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அவரின் சொந்த வீட்டின் கிரக பிரவேச பூஜை இருந்த காரணத்தால் தான் இன்றைய கூட்டத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் பங்கேற்கவில்லை என்றும் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“தெய்வம் நின்று கொல்லும்” – கே.டி.ராகவன் விவகாரத்தில் கடுப்பான காயத்ரி ரகுராம்

Admin

பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சைபர் க்ரைம்!

Admin

தன் மீது உள்ள பழியினை சட்டரீதியாக எதிர்கொள்வார் கே.டி.ராகவன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

அரசு வேலை வேண்டாம்… தனியார் வேலையாவது கொடுங்கள்… மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம்…

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

‘யாரும் செய்யாததையா செய்தார்’ – கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவால் சர்ச்சை

Admin

சட்டம் என்பது குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல… நடிகர் சூர்யா

Admin

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 வருட நெதன்யாகு ஆட்சி ..புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்!

Admin

இ-பாஸ் ரத்து..பஸ்கள் இயக்கம்… புதிய தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சி…

Admin

2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் இன்று முதல் விநியோகம்…!

Admin

கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

Admin

Leave a Comment