ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

SHARE

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் முதலாவது ஆட்டம் மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறுகிறது.

மும்பை:

ஐபிஎல் டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் இன்று மாலை 6 மணி அளவில் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 

கடந்த ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டிகளின்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேல் ரசிகர்களுக்கு இருந்த பெரிய எதிர்பார்ப்பு இந்த முறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் தனது மோசமான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு செல்லாமலேயே வெளியேறியதே இதன் காரணம்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை சில முக்கியமான மாற்றங்களோடு களம் இறங்க உள்ளது. அதில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது ரெய்னாவின் வருகை, இதனால் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் ஆட்டத்தை சென்னை அணியால் தைரியத்துடன் எதிர் கொள்ள முடியும்.  பேட்டிங்கில் மேலும் பலம் சேர்க்க தோனி, ராயுடு, ஜடேஜா, சாம் கரன், மொயின் அலி ஆகியோர் உள்ளனர். டூப்பிளசிஸ், கெய்க்வாட், ஜெகதீசன் ஆகியோரின் ஆட்டமும் களைக்கட்டும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 

பந்துவீச்சுக்காக லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், சாம் கரன், பிராவோ என 5 பேர் மட்டும் இருப்பதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் குறித்த சந்தேகமும் ரசிகர்கள் மனதில் எழ தொடங்கியுள்ளது. இருப்பினும் தோனி என்னும் பெயர் மட்டுமே பெரியதொரு நம்பிக்கையையும் எதிர்ப்பார்ப்பையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. 

இன்றைய போட்டியின் எதிரணியாக இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் புது தலைமையுடன் களம் இறங்க உள்ளது. ரிஷப் பந்த், இந்திய அணியின் விக்கெட் கீப்பர். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சதம் அடித்து ஆடியவர். ஐபிஎல் தொடரில் கோலி, ஸ்மித், ரெய்னா, ஸ்ரேயாஸ் அய்யர் போன்றோர் வரிசையில் 5வது இளம் வயது தலைவராக ரிஷப் பந்த் பார்க்கப்படுகிறார். கேப்டனாக தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அணியை வழி நடத்த வேண்டும் என்ற தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். புதிய தலைமையோடு தோனியின் ஆட்டத்தை பொருத்திருந்து காணலாம்.

  • சே.கஸ்தூரிபாய் 

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

“மிகப்பெரிய திட்டம் வருது” … மோடியின் சுதந்திர தின உரையில் வெளியான அறிவிப்பு

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Admin

தோனியை தொடர்ந்து உருவாகிறது “கங்குலியின் பயோபிக்” – ரசிகர்கள் உற்சாகம்

Admin

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

கொரோனா தேவி கோவில இடிச்சுட்டாங்க!. என்ன காரணம் தெரியுமா?

Admin

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

Leave a Comment