ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

SHARE

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் முதலாவது ஆட்டம் மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறுகிறது.

மும்பை:

ஐபிஎல் டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் இன்று மாலை 6 மணி அளவில் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 

கடந்த ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டிகளின்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேல் ரசிகர்களுக்கு இருந்த பெரிய எதிர்பார்ப்பு இந்த முறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் தனது மோசமான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு செல்லாமலேயே வெளியேறியதே இதன் காரணம்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை சில முக்கியமான மாற்றங்களோடு களம் இறங்க உள்ளது. அதில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது ரெய்னாவின் வருகை, இதனால் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் ஆட்டத்தை சென்னை அணியால் தைரியத்துடன் எதிர் கொள்ள முடியும்.  பேட்டிங்கில் மேலும் பலம் சேர்க்க தோனி, ராயுடு, ஜடேஜா, சாம் கரன், மொயின் அலி ஆகியோர் உள்ளனர். டூப்பிளசிஸ், கெய்க்வாட், ஜெகதீசன் ஆகியோரின் ஆட்டமும் களைக்கட்டும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 

பந்துவீச்சுக்காக லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், சாம் கரன், பிராவோ என 5 பேர் மட்டும் இருப்பதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் குறித்த சந்தேகமும் ரசிகர்கள் மனதில் எழ தொடங்கியுள்ளது. இருப்பினும் தோனி என்னும் பெயர் மட்டுமே பெரியதொரு நம்பிக்கையையும் எதிர்ப்பார்ப்பையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. 

இன்றைய போட்டியின் எதிரணியாக இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் புது தலைமையுடன் களம் இறங்க உள்ளது. ரிஷப் பந்த், இந்திய அணியின் விக்கெட் கீப்பர். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சதம் அடித்து ஆடியவர். ஐபிஎல் தொடரில் கோலி, ஸ்மித், ரெய்னா, ஸ்ரேயாஸ் அய்யர் போன்றோர் வரிசையில் 5வது இளம் வயது தலைவராக ரிஷப் பந்த் பார்க்கப்படுகிறார். கேப்டனாக தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அணியை வழி நடத்த வேண்டும் என்ற தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். புதிய தலைமையோடு தோனியின் ஆட்டத்தை பொருத்திருந்து காணலாம்.

  • சே.கஸ்தூரிபாய் 

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

ஐபிஎல் தொடரின் ஃபார்முலாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்…

Admin

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

Leave a Comment