கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

SHARE

மகாபாரதத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர் கர்ணன். கர்ணனின் பெயர் ஒரு காரணப் பெயர் ஆகும். பிறக்கும் போதே காதில் குண்டலங்கள், மார்பில் கவசம் ஆகியவற்ரோடு பிறந்த குழந்தை என்று மகாபரதத்தில் கர்ணன் வர்ணிக்கப்படுகின்றான். அவனது காதில் இருந்த குண்டலங்களே அவனது பெயருக்குக் காரணமாக அமைந்தன. வட மொழியில் ‘கர்ண’ என்றால் காது. எனவே கர்ணத்தில் அணிகலனோடு பிறந்தவன் கர்ணன் ஆனான்.

கர்ண – என்ற சொல் தமிழிலும் புழங்கிவருகிறது. மிக மோசமான செய்தியை ’கர்ண கொடூரம்’ என்று சொல்கிறோம். காதில் கேட்கவே முடியாத அளவுக்கு மோசமானது என்பதே இதன் பின்னுள்ள பொருள்.

ஒரு செய்தியை வாழ்மொழியாக மட்டுமே கேள்விப்படும்போது அதைக் ‘கர்ண பரம்பரைச் செய்தி’ என்கிறோம். செவிவழிச் செய்தி என்பது இதற்கு நிகரான வேறு தொடர்.

அதேசமயம் வடமொழியில் கரண – என்று இருந்த சொல்லும் தமிழில் கர்ண என்று புழங்கியது உண்டு. கரண என்ற சொல்லுக்கு உதவியாளன் அல்லது நண்பன் என்று பொருள். அதனால் கிராம அலுவலர்களை ‘கிராம கர்ணன்’ என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. பின்னர் கிராம கணக்கர்கள் ‘கர்ணம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு கர்ணனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை உச்சரிப்புப் போலிகள்.

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

பாசுபத சமயத்தின் விநாயகி சிலை கண்டுபிடிப்பு!. விநாயகர் வழிபாடு பிற மதங்களில் இருந்ததற்கு மற்றுமொரு சான்று!.

இரா.மன்னர் மன்னன்

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

இராமாயணத்தின் இப்படி ஒரு காண்டம் இருக்கிறதா? தியாகக் காண்டம் தெரியுமா?

Admin

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

Leave a Comment