5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

SHARE

ஜெய்ப்பூர்:

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த 20 வயது இளைஞருக்கு போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜூனு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததற்காக கைது செய்யப்பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

காவல்துறை தரப்பில் குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அளிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட இளைஞரும் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாதவராக வழக்கை எதிர்கொண்டார்.

வழக்கின் 26ஆவது நாளிலேயே விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், 27ஆம் நாளில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

அந்தத் தீர்ப்பில், இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் கண்களில் சிறுது கூட வருத்தம் காணப்படவில்லை. அவர் வருந்தி இருந்தால் தண்டனை வேறு விதமாக இருந்திருக்கும் – என்றே நீதிபதி குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கில் வேகமாக செயல்பட்டு வலுவான ஆதாரங்களை அளித்த காவல்துறைக்கும் நீதிபதி பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

Leave a Comment