ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

SHARE

அமெரிக்கா

நமது நிருபர்.

உலக அளவில் கொரோனாவின் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. தொடக்கம் முதலே கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இயலாத காரணத்தாலும் அமெரிக்க மக்கள் வேலை இழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தது. ’கொரோனாவில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளிப்போம்’ – என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்த ஜோ பைடன், அதற்காக ’கொரோனா நிவாரண நிதித் திட்டம்’ என்ற பிரம்மாண்ட மக்கள் நலத் திட்டத்தை அறிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள 85 சதவிகிதம் குடும்பத்தினருக்கு இந்த மாதத்திற்குள் தலா ஆயிரத்து நானூறு டாலர்கள் தொகையை அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதி ஆகும். இதற்காக ஒரு லட்சத்து தொன்னூறாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஜோ பைடன் அரசு ஒதுக்கியது.

இந்த கொரோனா நிவாரண நிதிக்கான மசோதா மார்ச் 10ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றமான செனட்டில் நிறைவேறி உள்ளது. இதனால் அமெரிக்கக் குடும்பங்கள் விரைவில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண நிதியைப் பெற உள்ளன.

இந்தப் பணிகளோடு, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளின் தயாரிப்பை அதிகரித்து, அதன் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்க அரசு திட்டம் வகுத்து உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 வருட நெதன்யாகு ஆட்சி ..புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்!

Admin

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்தியது உலக வங்கி.!!

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

ஆப்கானில் போராளி குழுக்களுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலி

Admin

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

Leave a Comment